24 665b41b31ba3b
இந்தியாஉலகம்செய்திகள்

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர்

Share

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், இன்று(1)இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

அவர் கடைசியாக மே 22 அன்று ஐபிஎல் 2024 எலிமினேட்டரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார்.

தனது எக்ஸ் பக்கத்தில் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர், அந்த குறிப்பில் “கடந்த சில நாட்களாக எனக்கு கிடைத்த பாசம், ஆதரவு மற்றும் அன்பினால் நான் மூழ்கிவிட்டேன். இந்த உணர்வை ஏற்படுத்திய அனைத்து ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் மனமார்ந்த நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 25 சராசரியில் 1025 ஓட்டங்களை பெற்றுள்ளார்.அவரது அதிகபட்சம் 129 ஓட்டங்கள் மற்றும் 1 சதமும் அடித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில்,இந்தியாவுக்காக 94 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 39 சராசரியுடன் 1752 ஓட்டங்கள் பெற்றுள்ளதோடு அவரது அதிகபட்ச ஸ்கோர் 79 ஆகும்.

ரி20 களில் 2006-2022 க்கு இடையில், K இந்தியாவுக்காக 60 ரி20போட்டிகளில் விளையாடி 686 ஓட்டங்கள் பெற்றுள்ளதுடன் மற்றும் அவரது அதிகபட்சம் 55 ஓட்டங்கள் அவரது சராசரி 26.38 ஆகும்.

ஐபிஎல்: 2008-2024க்கு இடையில், 257 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 26.32 சராசரியில் 4842 ஓட்டங்கள் பெற்றுள்ளதுடன் அவரது அதிகபட்ச ஸ்கோர் 97 ஓட்டங்களாகும்.

இந்திய அணியில் 2004 முதல் விளையாடி வரும் இவர் ஐபிஎல்லின் ஆரம்பத்தில் டில்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார்.

பின்னர் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியதோடு இறுதியாக பெங்களூரு அணிக்காக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...