24 665b98231cbd8
உலகம்செய்திகள்

பயங்கரவாத குற்றவாளிகள் 8 பேருக்கு ஈராக் தண்டனை

Share

பயங்கரவாத குற்றவாளிகள் 8 பேருக்கு ஈராக் தண்டனை

பயங்கரவாத குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட எட்டு பேரை ஈராக் (Iraq) தூக்கிலிட்டுள்ளதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த குற்றவாளிகளை ஈராக்கியர்கள் நசிரியா நகரில் உள்ள அல்-ஹட் சிறையில் “நீதி அமைச்சகக் குழுவின் மேற்பார்வையில்” தூக்கிலிடப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், “ பயங்கரவாதம்” என்று குற்றம் சாட்டப்பட்ட ஈராக்கியர்களுக்கு நீதிமன்றங்கள் சமீப ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனைகளை வழங்கியுள்ளன.

இதன்படி, ஈராக் சட்டத்தின் கீழ், பயங்கரவாதம் மற்றும் கொலைக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும், மேலும் மரணதண்டனை ஆணைகள் அதிபரால் கையொப்பமிடப்பட வேண்டும்.

இந்நிலையில், “பயங்கரவாத குற்றவாளிகள் மற்றும் இஸ்லாமிய அரசு குழுவைச் சேர்ந்தவர்கள்” என்று எட்டு பேரை தூக்கிலிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த நபர்கள் “பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் பிரிவு 4 இன் கீழ்” தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...

உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...