24 663e3effbb0c7
உலகம்செய்திகள்

ஹமாஸுக்கு எதிராக தனியே களமிறங்கிய இஸ்ரேல்

Share

ஹமாஸுக்கு எதிராக தனியே களமிறங்கிய இஸ்ரேல்

ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று போரிட தயாரென இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளாா்.

ஆயுத விநியோகத்தை நிறுத்துவதாக அமெரிக்கா (America) எச்சரித்துள்ள நிலையிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தென் காஸாவில் அமைந்துள்ள ரபா (Rafa) நகரில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கினால் இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் வழங்குவதை நிறுத்துவோமென அமெரிக்க அதிபா் ஜோ பைடன் (Joe Biden) நேற்றைய தினம் (9) எச்சரித்திருந்தார்.

இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவிக்கையில், “ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று சண்டையிட வேண்டிய சூழல் உருவானால் தனித்து நிற்கவும் தயாா். அத்தோடு விரல் நகங்களால் கூட நாங்கள் சண்டை போடுவோம்.

ஆனால் விரல் நகங்களை விட பலமான ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன” என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ரபா மீதான தாக்குதலுக்குப் போதுமான ஆயுதங்கள் தங்கள் வசமிருப்பதாக இஸ்ரேல் இராணுவச் செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
432e7679 1282 465e 9bbd 9fff0c004877
இலங்கைசெய்திகள்

மாலைத்தீவில் 355 கிலோ போதைப்பொருளுடன் கைதான 5 இலங்கையர்கள் 30 நாட்கள் தடுப்புக் காவலில்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்!

355 கிலோகிராம் ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட...

th
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாகப் படகில் இந்தியா சென்ற இலங்கையர் கைது: மன்னார் குடும்பஸ்தர் தனுஷ்கோடியில் பிடிபட்டார்!

சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர்...

Untitled design 2
செய்திகள்அரசியல்இலங்கை

பொய்க் குற்றச்சாட்டு வழக்கு: தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவைக் கைது செய்யப் பிடியாணை உத்தரவு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை (Thusitha Halloluwa) கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு...