24 663e3effbb0c7
உலகம்செய்திகள்

ஹமாஸுக்கு எதிராக தனியே களமிறங்கிய இஸ்ரேல்

Share

ஹமாஸுக்கு எதிராக தனியே களமிறங்கிய இஸ்ரேல்

ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று போரிட தயாரென இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளாா்.

ஆயுத விநியோகத்தை நிறுத்துவதாக அமெரிக்கா (America) எச்சரித்துள்ள நிலையிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தென் காஸாவில் அமைந்துள்ள ரபா (Rafa) நகரில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கினால் இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் வழங்குவதை நிறுத்துவோமென அமெரிக்க அதிபா் ஜோ பைடன் (Joe Biden) நேற்றைய தினம் (9) எச்சரித்திருந்தார்.

இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவிக்கையில், “ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று சண்டையிட வேண்டிய சூழல் உருவானால் தனித்து நிற்கவும் தயாா். அத்தோடு விரல் நகங்களால் கூட நாங்கள் சண்டை போடுவோம்.

ஆனால் விரல் நகங்களை விட பலமான ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன” என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ரபா மீதான தாக்குதலுக்குப் போதுமான ஆயுதங்கள் தங்கள் வசமிருப்பதாக இஸ்ரேல் இராணுவச் செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...