24 6632d12c1ed3d
இந்தியாஉலகம்செய்திகள்

டெல்லியில் உள்ள 100 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Share

டெல்லியில் உள்ள 100 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் புது டெல்லியில் உள்ள 100 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் செய்தி வந்ததாக இந்திய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

நேற்று அதிகாலை 4.00 மணியளவில் அனைத்து பாடசாலைகளின் உத்தியோகபூர்வ மின்னஞ்சலுக்கும் குறித்த செய்தி கிடைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டலால் பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை அதிபர்கள் மற்றும் புதுடெல்லி பொலிஸார் கூட்டாக பாடசாலைகளை மூடி மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்த அனைத்து பாடசாலைகளிளும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு குழுவினர் நடத்திய சிறப்பு சோதனையில் இது போலி மிரட்டல் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்னஞ்சல் அனுப்பப்பட்ட இடத்தை டெல்லி பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக புதுடெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் இந்த மின்னஞ்சல் ரஷ்யாவில் இருந்து அனுப்பப்பட்டதாக தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் செய்தி புதுதில்லியில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு ஒரு நாள் முன்னதாக வந்ததாகவும் மேலும் சில நாட்களுக்கு முன்பு விமான நிலையத்திற்கும் வந்ததாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...