24 6632d12c1ed3d
இந்தியாஉலகம்செய்திகள்

டெல்லியில் உள்ள 100 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Share

டெல்லியில் உள்ள 100 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் புது டெல்லியில் உள்ள 100 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் செய்தி வந்ததாக இந்திய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

நேற்று அதிகாலை 4.00 மணியளவில் அனைத்து பாடசாலைகளின் உத்தியோகபூர்வ மின்னஞ்சலுக்கும் குறித்த செய்தி கிடைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டலால் பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை அதிபர்கள் மற்றும் புதுடெல்லி பொலிஸார் கூட்டாக பாடசாலைகளை மூடி மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்த அனைத்து பாடசாலைகளிளும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு குழுவினர் நடத்திய சிறப்பு சோதனையில் இது போலி மிரட்டல் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்னஞ்சல் அனுப்பப்பட்ட இடத்தை டெல்லி பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக புதுடெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் இந்த மின்னஞ்சல் ரஷ்யாவில் இருந்து அனுப்பப்பட்டதாக தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் செய்தி புதுதில்லியில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு ஒரு நாள் முன்னதாக வந்ததாகவும் மேலும் சில நாட்களுக்கு முன்பு விமான நிலையத்திற்கும் வந்ததாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
11 1
செய்திகள்உலகம்

மார்ச் 3-இல் தோன்றும் ‘இரத்த நிலவு’: 58 நிமிடங்கள் நீடிக்கும் 2026-இன் முதல் சந்திர கிரகணம்!

2026 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச...

goldsteal cleanup
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலையில் நூதனத் திருட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு!

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர்...

10 1
செய்திகள்உலகம்

கால்பந்து மைதானம் அளவுள்ள பிரம்மாண்ட பவளம்! கிரேட் பேரியர் ரீஃபில் தாய்-மகள் குழுவின் வரலாற்றுச் சாதனை.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றிலேயே உலகின் மிகப்பெரிய பவளக் காலனியை...

09 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள்...