24 6632e8e18e02a
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

Share

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் சேவைகளை முன்னெடுக்க வாகன வசதிகள் வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன (Eran Wickramaratne) தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன வசதி வழங்கப்படுமாயின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொதுச்சேவை வினைத்திறனாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒன்பது வருடங்களாக வாகன உரிமம் அல்லது வாகனம் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு வந்த அமைச்சர்களுக்கு கூட வாகனம் இல்லாதது பெரும் சிரமமாக மாறியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...