tamilnib 9 scaled
உலகம்செய்திகள்

கேரளாவில் நடைபெறும் ரஷ்ய ஜனாதிபதி தேர்தல்

Share

கேரளாவில் நடைபெறும் ரஷ்ய ஜனாதிபதி தேர்தல்

ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் துவங்கியுள்ள நிலையில், இந்தியாவின் கேரள மாநிலத்திலும் ரஷ்ய ஜனாதிபதி தேர்வுக்கான வாக்களிப்பு நடப்பதைக் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றுவருகிறது. இன்று, அதாவது, மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல், 17ஆம் திகதி வரை தேர்தல் நடைபெறுகிறது. ரஷ்யாவைப் பொருத்தவரை, எதிர்க்கட்சியினர் ஒன்றில் கொல்லப்பட்டுவிட்டார்கள், அல்லது சிறையிலோ தலைமறைவாகவோ இருக்கிறார்கள் என்பதால், புடினுக்குதான் வெற்றி என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

அப்படி புடின் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், அவரது பதவிக்காலம் குறைந்தபட்சம் 2030 வரை நீடிக்கும். 2020இல் ரஷ்ய அரசியல் சாசனத்தில் செய்யப்பட்ட மாற்றங்களின் அடிப்படையில், அவர் மீண்டும் தேர்தலில் நிற்கக்கூடும், அப்படியே 2036வரை பதவியில் நீடிக்கவும் கூடும்.

இந்நிலையில், இந்தியாவின் கேரள மாநிலத்திலும் ரஷ்ய ஜனாதிபதி தேர்வுக்கான வாக்களிப்பு நடைபெற்றுவருகிறது. அதாவது, இந்தியாவில் வாழும் அல்லது, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ரஷ்யர்கள் தேர்தலில் வாக்களிக்க வசதியாக, கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள ரஷ்ய தூதரத்தில் வாக்குச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பதற்கு தங்களுக்கு ஏற்பாடு செய்து தந்த அனைவருக்கும், ரஷ்ய தூதரகத்துக்கும், குறிப்பாக, சென்னையிலிருக்கும் ரஷ்ய துணைத் தூதரகத்துக்கும், தானும் கேரளாவில் வாழும் தன் சக ரஷ்யக் குடிமக்களும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகத் தெரிவிக்கிறார் ரஷ்யக் குடிமகளான Ulia என்பவர்

Share
தொடர்புடையது
15
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தீவிரம்: ஏப்ரலுக்குப் பிறகாவது நீதி உறுதி – அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ வாக்குறுதி!

2019 ஏப்ரல் 21 அன்று நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தற்போதைய...

14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மரண தண்டனை அமுலாகுமா? – அமைச்சரவை இன்னும் தீர்மானிக்கவில்லை என நலிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்!

இலங்கையில் தூக்குத் தண்டனை உள்ளிட்ட மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் இதுவரை எவ்வித...

13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கச்சதீவு திருவிழா பிப்ரவரி 27-இல் கொடியேற்றம்! – 8,000 பக்தர்கள் பங்கேற்க விரிவான ஏற்பாடு.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்த...

12
செய்திகள்அரசியல்இலங்கை

ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் நிகழ்வுகள் ரத்து: ஜனநாயகம் அடக்கப்பட்டுவிட்டது – அலி சப்ரி கடும் விசனம்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிரித்தானியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது, புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் (Oxford Union)...