இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய கிரிக்கெட் வீரரின் மரணம்
தமிழக அணிக்கு எதிரான போட்டியில் கர்நாடக அணியில் விளையாடிய கிரிக்கெட் வீரர் ஹொய்சலா கே மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏஜிஸ் தென் மண்டல கிரிக்கெட் (Aegis South Zone tournament) போட்டிகள் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் நடைபெற்று வருகின்றன.
இதில், தமிழ்நாடு – கர்நாடக அணிகள் மோதிய நேற்றைய போட்டியில் கர்நாடக அணி வெற்றி பெற்றது.
34 வயதான, ஹொய்சலா 25 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கர்நாடகா அணிக்காக விளையாடியுள்ளார்.
மேலும் அவர் கர்நாடக பிரீமியர் லீக் தொடரில் ஷிவமொக்கா லயன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
இந்நிலையில் தமிழக அணிக்கு எதிரான போட்டிக்கு பின், தனது அணி வீரர்களுடன் இரவு உணவு உண்பதற்காகச் சென்றுள்ளார்.
இதன்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஹொய்சலா மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து, அவருக்கு கிரிக்கெட் மைதானத்தில் இருந்த மருத்துவர்கள் உடனடியாக அவரச சிகிச்சை அளித்துள்ளனர்.
அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவரரை பவுரிங் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
அவரது மறைவிற்கு கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் இரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Comments are closed.