tamilni 51 scaled
உலகம்செய்திகள்

பாரிஸ் ரயில் நிலையத்தில் திடீரென தீயிட்டு பயங்கரவாத தாக்குதலை நடத்திய நபர்! அடையாளம் தெரிந்தது

Share

பாரிஸ் ரயில் நிலையத்தில் திடீரென தீயிட்டு பயங்கரவாத தாக்குதலை நடத்திய நபர்! அடையாளம் தெரிந்தது

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில், பயங்கரவாத தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.

பாரிஸின் Gare De Lyon ரயில் நிலையத்தில் Sagou Gouno Kassogue (32) என்ற நபர், திடீரென தனது பையில் தீயிட்டு கொளுத்தி பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டார்.

அத்துடன் அவர் பயணிகள் மீது கத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டுள்ளனர்.

காலை 8 மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனைத் தொடர்ந்து Kassogue பொலிஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டார்.

தற்போது அவர் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை வட்டாரம் கூறுகையில், ‘அவர் முதலில் தனது பையை பற்ற வைத்தார். பின்னர் ஒரு Escalator மூலம் சீரற்ற முறையில் மக்களை தாக்குவது போல் தோன்றியது’ என தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் லேசான காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Kassogue மாலியில் இருந்து 2016ஆம் ஆண்டு இத்தாலிக்கு வந்துள்ளார், அத்துடன் புகலிடக் கோரிக்கையைத் தொடர்ந்ததால் அவருக்கு குடியிருப்பு அனுமதி வழங்கப்பட்டது என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும் அவர் தீவிர மனநலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும், இந்த வார இறுதியில் அவர் டுரினில் உள்ள ஒரு மனநல மருத்துவரை சந்திக்க இருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

Share

Recent Posts

தொடர்புடையது
25 693ec68638296
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வவுனியாவில் 7739.5 ஏக்கர் நெற்செய்கை அழிவு: விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

வவுனியா மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள அனர்த்தம் காரணமாக, சுமார் 7739.5 ஏக்கர்...

13d5f9ce af20 4696 bf0a 60e56c536e64 1170x666 1
அரசியல்இலங்கைசெய்திகள்

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்: கோட்டாபய யாழ்ப்பாணம் வராததற்கான அச்சுறுத்தலைச் சத்தியக் கடதாசியில் சமர்ப்பிக்க உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் 2011ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவர்...

MediaFile 1 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பில் 270 டெங்கு நோயாளர்கள்: தேசிய ஒழிப்பு வாரத்தில் சோதனை நடவடிக்கை!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ஆண்டில் சுமார் 270க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்...

articles2FBKUgBmfeEql9AyVpMBVO
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள்: கடற்படை பயிற்சி நிறைவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தல்!

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நேற்று (டிசம்பர் 13) பிற்பகல் நடைபெற்ற பயிற்சி நிறைவு...