tamilni 516 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் தாக்குதலில் கனேடியர் பலி! என் இதயத்தை உடைக்கிறது..மொத்த கனேடிய பலி எண்ணிக்கையை கூறிய ட்ரூடோ

Share

ஹமாஸின் தாக்குதலில் கொல்லப்பட்ட கனேடியர்ளுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்ததுடன், தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

கடந்த அக்டோபர் 7ஆம் திகதி முதல் ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் காஸாவில் 21,500 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் மீது தென் ஆப்பிரிக்கா இனப்படுகொலை குற்றச்சாட்டினை முன்வைத்து வழக்குப்பதிவு செய்தது.

அதே போல் பல நாடுகள் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், கனடா தனது ஆதரவினை கூறி வருகிறது.

இந்த நிலையில், 8 கனேடியர்கள் ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘அக்டோபர் 7 அன்று ஹமாஸ் பயங்கரவாதத் தாக்குதல்களின்போது கனேடிய குடிமக்கள் இறந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் ஜூடி வெய்ன்ஸ்டீனும் ஒருவர் என்பது இப்போது நமக்கு தெரியும்.

இந்த செய்தி என் இதயத்தை உடைக்கிறது. கொல்லப்பட்ட 8 கனேடியர்களின் அன்புக்குரியவர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. அவர்களின் நினைவு வரமாக அமையட்டும்’ என கூறியுள்ளார்.

அதேபோல் அவரது மற்றொரு பதிவில், ‘வீழ்ந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கையில், ஹமாஸை மீண்டும் ஒருமுறை கண்டிக்கிறோம் மற்றும் அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க அழைப்பு விடுக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 1 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண் விளக்கமறியலில்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதிகளை...

25 68f4c824ac515
செய்திகள்இலங்கை

ராகம, படுவத்தை பேருந்து விபத்து: 9 மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்!

ராகம, படுவத்தை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேர்...

Landslide Warning 1200px 22 12 25 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் மழை மேலும் அதிகரிக்கும்: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல்...

25 68efb833da4d2
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள்

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...