tamilni 517 scaled
உலகம்செய்திகள்

கனடாவில் கடந்த 5 ஆண்டுகளில் இந்திய மாணவர்கள் அதிக அளவில் உயிரிழப்பு

Share

கடந்த 5 ஆண்டுகளில் கனடாவில் அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக ட்ரூடோ அரசு கவலை தெரிவித்துள்ளது.

கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சில காலமாக நல்லுறவு இல்லை. குறிப்பாக ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் மரணம் தொடர்பாக இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே நிலவும் மோதல் நிலைமையை மோசமாக்கியுள்ளது. இருந்தும் இந்திய மாணவர்களின் கனடா செல்லும் ஆர்வம் குறையவில்லை.

கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகியவை இந்திய மாணவர்களுக்கு மிகவும் விருப்பமான நாடுகளில் உள்ளன, ஆனால் கனடாவில் இந்திய மாணவர்களின் இறப்பு கவலைகளை எழுப்பியுள்ளது.

2018-ம் ஆண்டுக்குப் பிறகு அதிக இந்திய மாணவர்களின் இறப்புகளை கனடா பதிவு செய்துள்ளது.

கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசும் இது குறித்து கவலை தெரிவித்ததுடன், சர்வதேச மாணவர்களின் நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

2024-25 கல்வியாண்டு தொடங்கும் முன் இந்த புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்த கனடா அரசு இலக்கு வைத்துள்ளது.

அரசாங்கத்தின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களம் (Immigration, Refugees and Citizenship Canada, IRCC), மாணவர்களின் கவலைகளைத் தீர்ப்பதற்கான வழிகளை உருவாக்க மாகாணங்களும் கல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறுகிறது.

தி பிரிண்ட் அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் அதாவது 2018 முதல், வெளிநாட்டில் 403 இந்திய மாணவர்களின் இறப்புகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிவு செய்துள்ளது.

இதில் 91 இந்திய மாணவர்கள் கனடாவில் உயிரிழந்துள்ளனர்.

இயற்கையான காரணங்கள், விபத்துக்கள் மற்றும் மருத்துவ நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த மரணங்கள் நிகழ்ந்ததாக வெளியுறவு அமைச்சகத்தின் தரவுகள் கூறுகின்றன.

கனடாவைத் தொடர்ந்து பிரித்தானியாவில் 48 மாணவர்களும், ரஷ்யாவில் 40 பேரும், அமெரிக்காவில் 36 பேரும், அவுஸ்திரேலியாவில் 35 மாணவர்களும் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளீதரன் தெரிவித்தார்.

இந்திய மாணவர்களுக்கான இரண்டாவது தேர்வாக கனடா உள்ளது. பிப்ரவரி 2023-ல் வெளியுறவு அமைச்சகம் மாநிலங்களவையில் வழங்கிய தரவுகளின்படி, 2018 மற்றும் 2022க்கு இடையில் 5,67,607 இந்தியர்கள் கனடாவில் படிக்க வெளிநாடு சென்றுள்ளனர்.

2018 மற்றும் 2022க்கு இடையில், அதிகபட்சமாக 6,21,336 இந்திய மாணவர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர். அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு அடுத்தபடியாக 3,17,119 மாணவர்கள் பிரித்தானியாவுக்கு படிக்கச் சென்றனர்.

Share
தொடர்புடையது
25 6849c5dfe0a82
உலகம்செய்திகள்

சீனாவுடன் அதிரடியாக ஒப்பந்தம் செய்த ட்ரம்ப்..! நடக்கவுள்ள மாற்றங்கள்

லண்டனில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...

25 684a2d1c7f215
இலங்கைசெய்திகள்

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதல்...

25 684a1d46ac31b
இந்தியாசெய்திகள்

இந்தியா – இலங்கை ஒப்பந்தம் குறித்து வெளியாகியுள்ள சந்தேகம்

இந்தியாவின் இணக்கப்பாடு இன்றி இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை அம்பலப்படுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக...

25 684a2b04cca7e
இலங்கைசெய்திகள்

வெலிகம சம்பவத்தின் போது தவறாக வழிநடத்தப்பட்ட அதிகாரிகள்

2023ஆம் ஆண்டு வெலிகம சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற தன்னையும் ஏனையவர்களையும் மூத்த பொலிஸ் அதிகாரிகள்...