tamilnif 3 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் புதிய வகை வைரஸ்

Share

பிரித்தானியாவில் புதிய வகை வைரஸ்

பிரித்தானியாவில் முதல்முறையாக மனிதரில் பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரதானியாவின் வடக்கு யார்க்ஷயரில் தனி நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபருக்கு சுவாச பாதிப்பு அறிகுறிகள், லேசான காய்ச்சல் இருந்ததாகவும், ஆனால் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதனுடன் தொடர்புடைய நபர் பன்றிகளுடன் நேரம் செலவிட்டாரா என்பது தொடர்பில் உறுதியான தகவல் இல்லை என்றே கூறப்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் 50 பேர்களில் மட்டுமே பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

2009இல் பன்றிகளில் காணப்படும் ஒருவகை தொற்று பரவலாக மனிதர்களில் பாதிப்பை ஏற்படுத்தியது.

தற்போது பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட வடக்கு யார்க்ஷயரின் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகமைதுவ அமைப்பு (UKHSA) தெரிவித்துள்ளது.

இதனிடையே, காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டவர்கள் மற்றவர்களுடன், குறிப்பாக வயதானவர்கள் அல்லது பாதிக்கப்படக்கூடியவர்கள், பிற சுகாதார நிலைமைகளுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பன்றிகள் வளர்க்கும் விவசாயிகள் தங்கள் மந்தைகளில் பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டால் தங்கள் உள்ளூர் கால்நடை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...