2 8 scaled
உலகம்செய்திகள்

1 நிமிடத்திற்கு அடுத்தடுத்து 25 ராக்கெட் குண்டுகள்: இஸ்ரேல் மீது லெபனான் தாக்குதல்

Share

1 நிமிடத்திற்கு அடுத்தடுத்து 25 ராக்கெட் குண்டுகள்: இஸ்ரேல் மீது லெபனான் தாக்குதல்

வடக்கு இஸ்ரேல் பகுதி மீது லெபனான் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை காசாவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கொல்லப்பட்டும், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு இஸ்ரேலிய பகுதி மீது லெபனான் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளது.

ஒரு நிமிடத்திற்குள் சுமார் 25 ராக்கெட் குண்டுகளை வடக்கு இஸ்ரேலிய பகுதிகள் மீது லெபனான் வீசியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

மேலும் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் சாசா மற்றும் ஸ்தூலா குடியிருப்புகள் மீது விழுந்ததாகவும், தெற்கு லெபனானின் ஹெஸ்பொல்லா தளங்களில் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கத்தில் இந்த தாக்குதலை லெபனான் செய்து இருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் படுகாயங்கள் எதுவும் ஏற்படாத நிலையில், இந்த தாக்குதல் தொடரும் என லெபனான் எச்சரிக்கை விடுத்து இருப்பதாகவும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...