4 11
உலகம்செய்திகள்

ஹமாஸ் படைகளிடம் சிக்கிய பணயக்கைதிகள்… இஸ்ரேலில் நெதன்யாகு அரசுக்கு எதிராக இறுகும் மக்கள் போராட்டம்

Share

ஹமாஸ் படைகளிடம் சிக்கிய பணயக்கைதிகள்… இஸ்ரேலில் நெதன்யாகு அரசுக்கு எதிராக இறுகும் மக்கள் போராட்டம்

இஸ்ரேலிய பணயக் கைதிகளின் குடும்பங்கள் மற்றும் அவர்களது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்டவர்களின் அவலநிலை குறித்து அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க ஐந்து நாள் பேரணியின் முடிவில் சனிக்கிழமை ஜெருசலேமை வந்தடைந்துள்ளனர்.

குறித்த 5 நாள் பேரணியில் சுமார் 20,000 பேர்கள் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல் அவிவ்-ஜெருசலேம் பிரதான சாலையில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நெதன்யாகு அரசாங்கத்திற்கு அழுத்தம் அளிக்க வேண்டும் என்றே பாதிக்கப்பட்ட மக்கள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். நெதன்யாகு அரசாங்கம் தங்களை சந்திக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் அவர்களின் திட்டம் என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இனிமேலும் காத்திருக்க முடியாது எனவும், உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்கவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அத்துடன் பணயக்கைதிகளை மீட்க எதையும் இழக்கவும் அரசாங்கம் தயாராக வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அதிரடி தக்குதலைத் தொடர்ந்து 240 இஸ்ரேலிய மக்களையும் பிடித்து சென்றனர். குறித்த தாக்குதல் சம்பவத்தில் 1,200 இஸ்ரேலிய மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், ஹமாஸ் படைகளை ஒழிப்பதாக கூறி இஸ்ரேல் முன்னெடுக்கும் தாக்குதல்களில் சிக்கி பணயக்கைதிகளாக இருப்பவர்களும் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தை அவர்களின் உறவினர்கள் பலர் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் காஸா மீதான தாக்குதல் பணயக்கைதிகளை மீட்கும் பொருட்டு முன்னெடுப்பதாக இஸ்ரேல் அரசாங்கம் தரப்பு கூறி வருகிறது. இதனிடையே, ஹமாஸ் தாக்குதலை அடுத்து தங்கள் அரசாங்கம் கண்மூடித்தனமாக செயல்படுவதாக இஸ்ரேல் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இஸ்ரேல் தாக்குதலை அதிகரித்தால் பணயக்கைதிகள் கொல்லப்படுவார்கள் என தொடக்கத்தில் மிரட்டி வந்த ஹமாஸ், இஸ்ரேலிய தாக்குதலில் சில பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக தற்போது தெரிவித்துள்ளது.

ஆனால், இஸ்ரேல் ராணுவத்திடம் பல ஆண்டுகளாக சிக்கி சிறையில் உள்ள 7,000 பாலஸ்தீன மக்கள் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என்றே கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...