tamilni 79 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: நேரடியாக களமிறங்கவுள்ள அமெரிக்கா

Share

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: நேரடியாக களமிறங்கவுள்ள அமெரிக்கா

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் அமெரிக்க இராணுவம் நேரடியாக களத்தில் இறங்கும் என ஈரானையும் ஹிஸ்புல்லா அமைப்பையும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலை தாக்கியதில் இஸ்ரேல் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தமது மக்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பழிவாங்குவோம் என்றும் ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், அமெரிக்க ராணுவம் நேரடியாக களத்தில் இறங்கும் என ஈரானையும் ஹிஸ்புல்லா அமைப்பையும் அமெரிக்கா எச்சரித்துள்ளதுடன் அமெரிக்கா விமானம் தாங்கிக் கப்பல்களை மத்தியதரைக்கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளது.

இந்நிலையில், பலஸ்தீனத்திற்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பாரிய விளைவை சந்திக்க நெரிடும் என ஈரான் அமெரிக்காவை எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.

காசா பகுதி முழுவதும் கடும் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் காசா பகுதி ‘இரண்டு துண்டாக்கப்பட்டுள்ளது’ என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

இதனை இஸ்ரேல் இராணுவ ஊடகப் பேச்சாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், இஸ்ரேலிய படைகள் ‘காசா நகரை சுற்றி வளைத்துள்ளன என்றும், இப்போது தெற்கு காசா மற்றும் வடக்கு காசா என்று இரண்டும் துண்டாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர். இதைதொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.

ஹமாஸ் போராளிகளை ஒட்டு மொத்தமாக ஒழிப்போம் என்ற சபதத்துடன் இஸ்ரேல் போரை தொடர்ந்து வருகின்றது.

இந்த போரில் காசாவில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி வருகின்றது.

இவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...