உலகம்செய்திகள்

மின்னஞ்சல் மூலம் மிரட்டல்… பாதுகாப்பை அதிகரித்த ஆசிய நாடு

3 31 scaled
Share

மின்னஞ்சல் மூலம் மிரட்டல்… பாதுகாப்பை அதிகரித்த ஆசிய நாடு

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் விமானம் ஒன்றில் வெடிகுண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலை அடுத்து 42 விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மின்னஞ்சலின் நம்பகத்தன்மை குறித்து விசாரிக்கவும் பிலிப்பைன்ஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் பயணிகள் விமான போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை இந்த விவகாரம் தொடர்பில் தெரிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து வணிக ரீதியான விமான நிலையங்களிலும் உடனடியாக மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டதாக விமான போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், செபு, பிகோல், தாவோ மற்றும் பலவான் ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானங்களில் ஒன்றில் வெடிகுண்டு வெடிக்கும் என்றே மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

செபு மற்றும் பலவான் தீவுகள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குவியும் பிரபலமான பகுதிகளாகும்.

Share
Related Articles
23 4
உலகம்செய்திகள்

பிரான்ஸ் குடியுரிமை விதிகளை கடுமையாக்க உத்தரவிட்ட அமைச்சர்: சாடியுள்ள மனித உரிமைகள் அமைப்பு

பிரான்ஸ் உள்துறை அமைச்சர், குடியுரிமை விதிகளை கடுமையாக்குமாறு தனது அமைச்சக மற்றும் துறைசார் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்....

21 5
உலகம்செய்திகள்

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி

பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம்...

24 3
உலகம்செய்திகள்

அப்பாவிகளை கொன்ற பயங்கரவாதிகளுக்கு தண்டனை கொடுத்துள்ளோம்! இந்திய பாதுகாப்புத்துறை

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் உரிமையை இந்தியா பயன்படுத்தியிருக்கிறது என பாதுகாப்புத்துறை...

26 3
உலகம்செய்திகள்

3 வருடங்கள் போன் பயன்படுத்தாமல் SSC-ல் தேர்ச்சி பேற்று , பின்னர் UPSC-ல் தேர்ச்சி பெற்ற இளம் அதிகாரி யார்?

3 வருடங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தாமல் எஸ்எஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் 24 வயதில் யுபிஎஸ்சியில்...