eeeee scaled
உலகம்செய்திகள்

கனடா பிரதமரை கேலி செய்த எதிர்க்கட்சித் தலைவர்

Share

கனடா பிரதமரை கேலி செய்த எதிர்க்கட்சித் தலைவர்

G 20 உச்சி மாநாட்டுக்காக இந்தியாவுக்குச் சென்ற கனடா பிரதமரிடம், இந்திய பிரதமர் கனடாவில் காலிஸ்தான் அமைப்பினர் இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்துதல் முதலான விடயங்கள் குறித்துப் பேச, மற்ற நாடுகளின் தலைவர்களோ அவரைக் கண்டுகொள்ளவே இல்லை என கேலி செய்துள்ளார் கனடா எதிர்க்கட்சித் தலைவர்.

கனடா எதிர்க்கட்சித் தலைவரும், அடுத்து கனேடிய பிரதமராகலாம் என எதிர்பார்க்கப்படு வருமான கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான Pierre Poilievre, முந்தைய ட்விட்டர், இந்நாள் எக்ஸில் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் நிற்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவேற்றம் செய்து, இப்படி ஒரு அவமானம் யாருக்கும் ஏற்படக்கூடாது என கேலி செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் ட்ரூடோ சின்சியராக புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருக்க, மோடியோ, வேறு யாரையோ பார்த்து கைநீட்டி பேசி புன்னகைத்துக்கொண்டிருக்கிறார்.

வெளியே போகும் வழி இதுதான் என மோடி ட்ரூடோவிடம் சொல்வது போல அந்த புகைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு நாட்கள் நடைபெற்ற உச்சி மாநாட்டில் கனடா பிரதமர் ட்ரூடோவை யாரும் கண்டுகொள்ளவில்லை என பல தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரீமியர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் இந்திய பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்திய நிலையில், ட்ரூடோ புறக்கணிக்கப்பட்டதாகவும், தற்செயலாக தலைவர்கள் சந்தித்த போது பேசினார்களேயொழிய, யாரும் முக்கியத்துவம் கொடுத்து ட்ரூடோவிடம் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதைத்தான் கனடா எதிர்க்கட்சித் தலைவரான Pierre Poilievre, இப்படி கனேடிய பிரதமர் மற்ற உலகத்தலைவர்களால் மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படுவதைப் பார்க்க யாருக்கும் விருப்பமில்லை என கேலி செய்துள்ளார்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...