Connect with us

இலங்கை

கனேடியர் படுகொலையில் இந்தியாவின் பங்கு உறுதி… வெளிப்படையாக குற்றஞ்சாட்டிய பிரதமர் ட்ரூடோ

Published

on

tamilni 238 scaled

கனேடியர் படுகொலையில் இந்தியாவின் பங்கு உறுதி… வெளிப்படையாக குற்றஞ்சாட்டிய பிரதமர் ட்ரூடோ

கனடாவில் சீக்கியர் தலைவர் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்திய அதிகாரிகளால் கனேடிய மண்ணில் இந்தப் படுகொலை சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதமர் ட்ரூடோ, இது மிக மிக தீவிரமான விடயம் என்றார். இந்த விவகாரத்தில் இந்திய அரசாங்கம் கனடாவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் ட்ரூடோ கோரியுள்ளார்.

மேலும், வேறொரு நாட்டில் நீதித்துறைக்கு புறம்பான செயல்பாடுகள் குறித்த தனது நிலைப்பாடு சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டது என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்தும் என்று எதிர்பார்ப்பதாகவும் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் G20 மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்த விவகாரம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரிடையாகவும் தனிப்பட்ட முறையிலும் விவாதித்ததாகவும், ஆனால் பிரதமர் மோடி தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை எனவும் பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் கனடாவில் சிலரால் முன்னெடுக்கப்படுவதில் இந்தியா கவலை கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய மண்ணில் கனேடிய குடிமகன் ஒருவர் கொல்லப்பட்டதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் நமது இறையாண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும் என ட்ரூடோ அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 18ம் திகதி பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் சீக்கிய குருதுவார ஒன்றின் வெளியே ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலை செய்யப்பட்டார். இந்திய அரசாங்கத்தால் பிரிவினைவாதி என குறிப்பிடப்படும் நிஜ்ஜர் படுகொலை, கனடாவில் சீக்கிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், தற்போது கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், இந்தியாவை குற்றஞ்சாட்டியுள்ளதுடன், பவன் குமார் ராய் என்ற தூதரக அதிகாரியையும் வெளியேற்றியுள்ளார்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்20 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 26.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2024, குரோதி வருடம் ஆடி 10 வெள்ளிக் கிழமை, சந்திரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் உள்ள மகம், பூரம்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 25.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஜூலை 25, 2024, குரோதி வருடம் ஆடி 9, வியாழக் கிழமை, சந்திரன் கும்பம் ராசியில் பூரம், சஞ்சரிக்கிறார். கடகம், சிம்ம ராசியில் உள்ள...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 24.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஜூலை 24, 2024, குரோதி வருடம் ஆடி 8, புதன் கிழமை, சந்திரன் கும்பம் ராசியில் பூரம், சஞ்சரிக்கிறார். கடகம் ராசியில் உள்ள பூசம்,...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 23.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஜூலை 23, 2024, குரோதி வருடம் ஆடி 25, செவ்வாய்க் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள திருவாதிரை, புனர்பூசம்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 22.07.2024

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 22.07.2024 Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (ஜூலை 22, 2024 திங்கட் கிழமை) இன்று சந்திரன்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 21.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 21.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஜூலை 21, 2024, குரோதி வருடம் ஆடி...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்7 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 20.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 20.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஜூலை 20, 2024, குரோதி வருடம் ஆடி...