rtjy 40 scaled
உலகம்செய்திகள்

தைவானில் இடை நிறுத்தப்பட்டுள்ள விமான சேவைகள்

Share

தைவானில் இடை நிறுத்தப்பட்டுள்ள விமான சேவைகள்

தைவானில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக தற்காலிகமாக 46 விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீவு நாடான தைவானில் கேப் எலுவான்பி நகரின் கிழக்கு பகுதியில் புதிய புயல் உருவாகி உள்ளது.

ஹைகுய் என பெயரிடப்பட்ட இந்த புயலானது தைவானின் மேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

குறித்த புயலானது தைவானில் கரையை கடக்கும்போது மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவானில் 28 சர்வதேச விமான சேவைகள் மற்றும் 18 உள்நாட்டு விமான சேவைகள் தற்காலிகாமாக நிறுத்தப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகிறது.

சில விமானங்கள் புறப்பட தாமதமானதால் விமான நிலையத்துக்கு வந்திருந்த பயணிகள் பெரும் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் பயணிகளின் பாதுகாப்பு கருதி படகு போக்குவரத்தும் அங்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
2 16
இலங்கைசெய்திகள்

மாவனல்லையில் மற்றுமொரு கோர விபத்து! இருவர் காயம்

மாவனல்லைப் பிரதேசத்தில் மற்றுமொரு பேருந்து – லொறி விபத்தில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

3 14
உலகம்செய்திகள்

வெளிநாடொன்றில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

4 15
இலங்கைசெய்திகள்

சின்ன சஹ்ரான் கொழும்பில் கைது

சின்ன சஹ்ரான் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபரொருவர் கொழும்பு பம்பலப்பிட்டியில் வைத்து பொலிஸாரினால் கைது...

5 14
இலங்கைசெய்திகள்

அரசியலில் இருந்து முற்றாக ஓய்வு பெறும் முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அரசியல் செயற்பாடுகளில் இருந்து முற்றாக ஒதுங்கி ஓய்வு பெறவுள்ளதாக...