rtjy 41 scaled
இலங்கைசெய்திகள்

அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை ரணிலுக்கு கிடைத்துள்ள அதிகாரம்

Share

அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை ரணிலுக்கு கிடைத்துள்ள அதிகாரம்

நாடு ஸ்திரமற்ற நிலைக்கு செல்வதற்கு இடமளிக்காமல் அடுத்த தேர்தல் வரைக்கும் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான விரிவான அதிகாரம் பதில் ஜனாதிபதிக்கு கிடைக்கின்றது என வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தற்போதுள்ள இந்த மக்கள் ஆணை நேரடியாகக் கிடைத்தது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்காகும். அந்தப் பதவிக்காலத்தின் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதே பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்களாகும்.

அதற்குச் சட்டத்தில் கட்டுப்பாடுகள் எதுவுமில்லை. நாடு ஸ்திரமற்ற நிலைக்கு செல்வதற்கு இடமளிக்காமல் அடுத்த தேர்தல் வரைக்கும் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான விரிவான அதிகாரம் பதில் ஜனாதிபதிக்கு கிடைக்கின்றது.

அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின் மூலம் நாமே தெரிவு செய்தோம். அவர் ஐ.தே.கட்சியின் தலைவராக இருந்தாலும் தற்போது அவர் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் ஜனாதிபதியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....