உலகம்செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைன் நடத்தியுள்ள மொத்த ட்ரோன் தாக்குதல் எண்ணிக்கை

images
Share

ரஷ்யா மீது உக்ரைன் நடத்தியுள்ள மொத்த ட்ரோன் தாக்குதல் எண்ணிக்கை

இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ரஷ்யா மற்றும் கிரிமியாவில் 190 முறை உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய நிலையில் கிட்டத்தட்ட 18 மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரஷ்யாவின் பெரும் ஆயுதப் பலத்திற்கு முன்னதாக உக்ரைன் உறுதியாக நிலைத்து நிற்க அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து பல்வேறு உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

இதுவரையிலான போரின் நடுப்பகுதி வரை தடுப்பு தாக்குதல் முறையை மட்டும் செயல்படுத்தி வந்த உக்ரைன், மேற்கத்திய நாடுகளிடம் இருந்து போதுமான ஆயுத உதவியை கையிருப்பு பெற்றவுடன் ரஷ்யாவுக்கு எதிரான எதிர்ப்பு தாக்குலை பலமாக முன்வைத்து வருகின்றனர்.

ரஷ்யா மீதான உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்
உக்ரைனின் எதிர்ப்பு தாக்குதல் தொடங்குவதாக உக்ரைன் அறிவித்ததில் இருந்து ரஷ்யா மற்றும் கிரிமியாவின் பல பகுதிகளில் உக்ரைன் தொடர் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது.

அந்த வகையில் இருநாடுகளுக்கு இடையிலான போர் தாக்குதல் தொடங்கியதில் இருந்து சுமார் 190 முறை ரஷ்யா மற்றும் கிரிமியாவில் உள்ள பல பகுதிகளில் உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலின் பெரும்பாலான பகுதியில் ரஷ்ய தலைநகரான மாஸ்கோ, மேற்கு ரஷ்ய எல்லை பகுதிகள் மற்றும் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா ஆகியவற்றில் நடத்தப்பட்டுள்ளது.

கிரிமியாவின் சில பகுதியில் கடல் வழி ட்ரோன் தாக்குதலையும் உக்ரைன் முன்னெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...