1264996 cockpit
உலகம்செய்திகள்

இரண்டு இந்திய விமானிகள் மரணம்: சோகத்தை ஏற்படுத்தியுள்ள தகவல்

Share

கடந்த இரண்டு நாட்களில், இந்திய விமானிகள் இருவர் உயிரிழந்த விடயம் சோகத்தை உருவாக்கியுள்ளது.

நேற்று முன்தினம், வியாழக்கிழமை, நாக்பூரிலிருந்து புனே நோக்கிச் செல்லும் விமானத்தின் விமானியாகிய கேப்டன் மனோஜ் சுப்ரமணியம் (40), விமானத்தில் ஏறச்செலும்போது நிலைகுலைந்து விழுந்துள்ளார்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமையன்று, டெல்லியிலிருந்து தோஹா நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்றில் கூடுதல் விமானப் பணியாளராக பயணித்துக்கொண்டிருந்த மற்றொரு விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அவரும் உயிரிழந்துவிட்டார். இரண்டு நாட்களில், இந்திய விமானிகள் இருவர் உயிரிழந்த விடயம் சோகத்தை உருவாக்கியுள்ள நிலையில், இந்த தகவல்களை விமான போக்குவரத்துத்துறை உறுதி செய்துள்ளது.

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, மியாமியிலிருந்து சிலி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானம் ஒன்றின் விமானியான Ivan Andaur (56) என்பவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, கழிவறையிலேயே அவர் நிலைகுலைந்து விழுந்து இறந்துவிட்ட சம்பவம் நினைவிருக்கலாம்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...