முதல்முறையாக வானத்தை பார்த்த சிம்பன்சி
உலகம்செய்திகள்

28 ஆண்டுகள் பிறகு முதல்முறையாக வானத்தை பார்த்த சிம்பன்சி

Share

முதல்முறையாக வானத்தை பார்த்த சிம்பன்சி!

28 ஆண்டுகள் பிறகு முதல்முறையாக வானத்தை பார்த்த சிம்பான்சி துள்ளி குதித்து மகிழ்ந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நியூயார்க்கை தளமாக கொண்ட கலிபோர்னியா சரணாலய ஆய்வாகத்தில் வெனிலா என்ற சிம்பன்சி சுமார் 28 ஆண்டுகளாக கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கலிபோர்னியா சரணாலயத்தில் அடைக்கப்பட்டிருந்த வெனிலா தற்போது புளோரிடா சரணாலயத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது, முதல்முறையாக வெளி உலகை பார்த்தது வெனிலா. முதலில் வெளியே வர தயக்கம் காட்டிய வெனிலா சிம்பன்சி, வெளியே வந்து ஆச்சரியமாக அங்கும், இங்கும் வியப்பாக வானத்தை பார்த்தது.

இதன் பின்னர் வெளியே வந்த வெனிலா மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஆரவாரம் செய்தது. மற்ற சிம்பன்சி குரங்குகளை வெனிலா கட்டித் தழுவி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

இது குறித்து மீட்புப் பணியாளர்கள் கூறுகையில், 28 வயதான வெண்ணிலா என்ற சிம்பன்சி புளோரிடாவில் உள்ள சரணாலயத்தில் முதன்முறையாக திறந்த வானத்தைப் பார்த்தபோது “பிரமிப்பில்” ஆழ்ந்தது என்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் நெஞ்சம் மகிழ்ச்சியில் நனைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...

world 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தங்கல்லையில் பரபரப்பு: போதையில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள தங்கல்லை, குடவெல்ல பகுதியில் நேற்று (மே 04) மாலை நபர் ஒருவர்...

world 24
செய்திகள்இந்தியா

தமிழகத் தேர்தலில் தவெக சாதனை வெற்றி: மே 7-ல் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட நடிகர் விஜய்யின்...

world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...