உலகம்செய்திகள்

டிக்டொக்கால் பறிபோனது உயிர்!

Share

டிக்டொக்கால் பறிபோனது உயிர்!

டிக்டொக் செயலில் இயங்கிகொண்டிருக்கும் யாழ்ப்பாண பெண் ஒருவரால் சுவிஸில் உள்ள நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டுக்கு சென்று தன் உயிரை மாய்ந்துகொண்டுள்ள சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸ் நாட்டில் இருந்து இளைஞரொருவர் தனது தந்தைக்கு நடந்த சம்பவம் தொடர்பில் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்து இவ்வாறான ஒரு சம்பவம் இனி யாருக்கும் நடக்க கூடாது எங்களின் விபரங்களை வெளியிட வேண்டாம் ஆனால் இந்த பிரச்சனையை வெளி உலகிற்கு தெரியப்படுத்துங்கள் என கேட்டுகொண்டுள்ளார்.

 

எனது தந்தைக்கு வயது 60 அவர் அடிக்கடி டிக் டாக்கில் இயங்கிகொண்டிருந்தார், நீண்ட காலமாக அவர் யாருடனும் சரியாக பேசவும் இல்லை பழகவும் இல்லை தன்னிச்சையாகவே சிந்தித்து கொண்டிருந்தாக மகன் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து சுவிஸில் இருந்து ஜேர்மன் நாட்டுக்கு சுற்றுலா சென்றிந்தார், அங்கு சென்றிருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உயிரை மாய்ந்துக்கொண்டுள்ளதாக செய்தி எங்களுக்கு கிடைத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ஜேர்மன் நாட்டுக்கு சென்று அவரின் இறுதி கிரியைகளை செய்தாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் எங்களுக்கு ஒரு சிந்தனையாக இருந்தது அப்படியென குறையை எங்கள் தந்தைக்கு செய்யாமல் விட்டுவிட்டோம். எங்களது தந்தை யாழ்ப்பாணத்தில் இருந்து சிறு வயதிலேயே சுவிஸிற்கு இடம்பெயர்ந்து வந்து உழைத்து எங்களை ஆளாகியிருக்கிறார்.

அப்படியிருக்கையில் எங்களை அறியாமல் நாங்கள் எதாவது அவருக்கு குறை வைத்தோமா என சிந்தித்துக் கொண்டிருந்த வேளை தந்தையின் நண்பர் மூலம் அவரின் டிக் டாக்க்கை தீடிரென பரிசோதனை செய்தபோது அதில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போதுதான் ஒரு அதிர்ச்சிக்கரமான உண்மை தெரியவந்துள்ளது.

தந்தைக்கும் அதேவேளை யாழ்ப்பாணத்தில் டிக் டொக்கை பயன்படுத்திக்கொண்டிருந்த யுவதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தனது தந்தையோடு குறித்த யுவதி அபாசமாக பேசியுள்ளார்.

பின்னர் தந்தையிடம் அதனை காட்டி காட்டி குறித்த யுவதி பணத்தை வாங்கிவந்துள்ளார், மேலும் தொடர்ந்து இவ்வாறு பணத்தை கேட்டு வற்புறுத்திய நிலையில் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து ஜேர்மன் நாட்டிற்கு சென்று தந்தை உயிரை மாய்ந்துகொண்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவங்கள் எல்லாம் எங்களுக்கு தெரியக்கூடாது என்று தனது நண்பரிடம் அவர் தெரிவித்திருக்கின்றார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 683d2e2c6c0e6
செய்திகள்இலங்கை

இலங்கைத் தமிழர் விடிவு இந்திய அரசாங்கத்தால் மட்டுமே சாத்தியம்: யாழ்ப்பாணத்தில் திருமாவளவன் கருத்து!

இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து...

images 15
செய்திகள்இலங்கை

உப குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு – நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்தும் சிறப்புப் பரிந்துரை!

அரச சேவையின் மறுசீரமைப்பு, முறையான வேதனைக் கட்டமைப்பை உருவாக்குதல், மற்றும் தொழில்முறையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை நிறுவுதல்...

Bribery Commission
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய இழப்பீடு மோசடி: ₹100 கோடிக்கும் அதிகமான இழப்பீடு பெற்ற 42 முன்னாள் அமைச்சர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சட்ட நடவடிக்கை!

அரகலய போராட்டத்தின் போது வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, 100 கோடிக்கும்...

ak am 2003
செய்திகள்அரசியல்இலங்கை

அர்ஜூன் மகேந்திரன், ராஜபக்ச சொத்துக்கள்: இரகசிய நடவடிக்கையில் இறங்கிய அரசாங்கம்

மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை...