உலகம்செய்திகள்

டிக்டொக்கால் பறிபோனது உயிர்!

Share

டிக்டொக்கால் பறிபோனது உயிர்!

டிக்டொக் செயலில் இயங்கிகொண்டிருக்கும் யாழ்ப்பாண பெண் ஒருவரால் சுவிஸில் உள்ள நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டுக்கு சென்று தன் உயிரை மாய்ந்துகொண்டுள்ள சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸ் நாட்டில் இருந்து இளைஞரொருவர் தனது தந்தைக்கு நடந்த சம்பவம் தொடர்பில் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்து இவ்வாறான ஒரு சம்பவம் இனி யாருக்கும் நடக்க கூடாது எங்களின் விபரங்களை வெளியிட வேண்டாம் ஆனால் இந்த பிரச்சனையை வெளி உலகிற்கு தெரியப்படுத்துங்கள் என கேட்டுகொண்டுள்ளார்.

 

எனது தந்தைக்கு வயது 60 அவர் அடிக்கடி டிக் டாக்கில் இயங்கிகொண்டிருந்தார், நீண்ட காலமாக அவர் யாருடனும் சரியாக பேசவும் இல்லை பழகவும் இல்லை தன்னிச்சையாகவே சிந்தித்து கொண்டிருந்தாக மகன் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து சுவிஸில் இருந்து ஜேர்மன் நாட்டுக்கு சுற்றுலா சென்றிந்தார், அங்கு சென்றிருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உயிரை மாய்ந்துக்கொண்டுள்ளதாக செய்தி எங்களுக்கு கிடைத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ஜேர்மன் நாட்டுக்கு சென்று அவரின் இறுதி கிரியைகளை செய்தாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் எங்களுக்கு ஒரு சிந்தனையாக இருந்தது அப்படியென குறையை எங்கள் தந்தைக்கு செய்யாமல் விட்டுவிட்டோம். எங்களது தந்தை யாழ்ப்பாணத்தில் இருந்து சிறு வயதிலேயே சுவிஸிற்கு இடம்பெயர்ந்து வந்து உழைத்து எங்களை ஆளாகியிருக்கிறார்.

அப்படியிருக்கையில் எங்களை அறியாமல் நாங்கள் எதாவது அவருக்கு குறை வைத்தோமா என சிந்தித்துக் கொண்டிருந்த வேளை தந்தையின் நண்பர் மூலம் அவரின் டிக் டாக்க்கை தீடிரென பரிசோதனை செய்தபோது அதில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போதுதான் ஒரு அதிர்ச்சிக்கரமான உண்மை தெரியவந்துள்ளது.

தந்தைக்கும் அதேவேளை யாழ்ப்பாணத்தில் டிக் டொக்கை பயன்படுத்திக்கொண்டிருந்த யுவதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தனது தந்தையோடு குறித்த யுவதி அபாசமாக பேசியுள்ளார்.

பின்னர் தந்தையிடம் அதனை காட்டி காட்டி குறித்த யுவதி பணத்தை வாங்கிவந்துள்ளார், மேலும் தொடர்ந்து இவ்வாறு பணத்தை கேட்டு வற்புறுத்திய நிலையில் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து ஜேர்மன் நாட்டிற்கு சென்று தந்தை உயிரை மாய்ந்துகொண்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவங்கள் எல்லாம் எங்களுக்கு தெரியக்கூடாது என்று தனது நண்பரிடம் அவர் தெரிவித்திருக்கின்றார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6849c5dfe0a82
உலகம்செய்திகள்

சீனாவுடன் அதிரடியாக ஒப்பந்தம் செய்த ட்ரம்ப்..! நடக்கவுள்ள மாற்றங்கள்

லண்டனில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...

25 684a2d1c7f215
இலங்கைசெய்திகள்

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதல்...

25 684a1d46ac31b
இந்தியாசெய்திகள்

இந்தியா – இலங்கை ஒப்பந்தம் குறித்து வெளியாகியுள்ள சந்தேகம்

இந்தியாவின் இணக்கப்பாடு இன்றி இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை அம்பலப்படுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக...

25 684a2b04cca7e
இலங்கைசெய்திகள்

வெலிகம சம்பவத்தின் போது தவறாக வழிநடத்தப்பட்ட அதிகாரிகள்

2023ஆம் ஆண்டு வெலிகம சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற தன்னையும் ஏனையவர்களையும் மூத்த பொலிஸ் அதிகாரிகள்...