உலகம்
வட கொரியாவில் பரவும் புதிய தொற்று! அச்சத்தில் மக்கள்
வட கொரியாவின் சில மாகாணங்களில் புதிய வகையான குடல் தொற்று நோய் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்புதிதாக ஏற்பட்டுள்ள தொற்று மக்களிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இதன்படி வெள்ளிக்கிழமை 23,160 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதுமட்டுமின்றி ஏப்ரல் பிற்பகுதியில் இருந்து நாட்டில் மொத்த எண்ணிக்கையில் 4.58 மில்லியனுக்கு மேல் நோய் தொற்று பதிவாகியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பரவும் இந்த தொற்று எப்போதும் வரும் தொற்றா அல்லது வேறு ஏதேனும் தீவிர நோயா என்று ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது.
You must be logged in to post a comment Login