24 6625b05ac154a
உலகம்செய்திகள்

தெற்கு செர்பியாவில் 1000 கிலோ நிறை கொண்ட வெடி குண்டு மீட்பு

Share

தெற்கு செர்பியாவில் 1000 கிலோ நிறை கொண்ட வெடி குண்டு மீட்பு

தெற்கு செர்பிய நகரமொன்றில், 1999 ஆம் ஆண்டு நேட்டோ குண்டுவீச்சில் வெடிக்காமல் இருந்த 1000 கிலோ நிறையைக்கொண்ட குண்டு ஒன்றை நிபுணர்கள் அகற்றியுள்ளனர்.

 

இதன்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை அதிகாரிகள் குறித்த இடத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர். இந்த 1,000 கிலோ நிறையைக் கொண்ட வெடிகுண்டு கட்டுமான தளத்தில் இருந்து வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இந்தநிலையில் அது அழிக்கப்படும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

 

செர்பியா மீது நேட்டோ நாடுகள் குண்டுவீச்சு 1999 மார்ச் 24, அன்று குண்டு வீச்சை ஆரம்பித்தன இந்த தாக்குதல்கள் 78 நாட்களுக்கு தொடர்ந்தது.

 

கொசோவோவில் அல்பேனிய இனப் பிரிவினைவாதிகள் மீது செர்பிய தலைவர் ஸ்லோபோடன் மிலோசெவிச்சின் கொடூரமான ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே குண்டுவீச்சு தாக்குதல்களின் முதன்மை நோக்கமாக இருந்தது.

இதன்போது வீசப்பட்ட 1000 கிலோ நிறைக்கொண்ட குண்டே வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெலிக்கடை சிறைக்கைதி மரணம்: மூன்று சிறைக்காவலர்கள் கைது; நீதிமன்றில் ஆஜர்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதுடைய கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக,...

world 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாலத்தீவு – இலங்கை இடையிலான வரலாற்றுப் பிணைப்பு: ஜனாதிபதி மாளிகையில் டாக்டர் முகமது முய்ஸு உரை

மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு மற்றும் முதற்பெண்மணி சஜிதா முகமது ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

world 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகள்: 37 சீன நாட்டவர்கள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதற்காகவும், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் பாதுகாப்புப் படையினரால்...

world 19
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – இந்தியா இடையே தரைவழி இணைப்பு: தயக்கங்களை கைவிட வேண்டிய தருணம் என இந்திய உயர் ஆணையர் பேச்சு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைவழிப் பாலத்தை அமைக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கையிலுள்ள இந்திய உயர் ஆணையர்...