images
உலகம்செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைன் நடத்தியுள்ள மொத்த ட்ரோன் தாக்குதல் எண்ணிக்கை

Share

ரஷ்யா மீது உக்ரைன் நடத்தியுள்ள மொத்த ட்ரோன் தாக்குதல் எண்ணிக்கை

இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ரஷ்யா மற்றும் கிரிமியாவில் 190 முறை உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய நிலையில் கிட்டத்தட்ட 18 மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரஷ்யாவின் பெரும் ஆயுதப் பலத்திற்கு முன்னதாக உக்ரைன் உறுதியாக நிலைத்து நிற்க அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து பல்வேறு உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

இதுவரையிலான போரின் நடுப்பகுதி வரை தடுப்பு தாக்குதல் முறையை மட்டும் செயல்படுத்தி வந்த உக்ரைன், மேற்கத்திய நாடுகளிடம் இருந்து போதுமான ஆயுத உதவியை கையிருப்பு பெற்றவுடன் ரஷ்யாவுக்கு எதிரான எதிர்ப்பு தாக்குலை பலமாக முன்வைத்து வருகின்றனர்.

ரஷ்யா மீதான உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்
உக்ரைனின் எதிர்ப்பு தாக்குதல் தொடங்குவதாக உக்ரைன் அறிவித்ததில் இருந்து ரஷ்யா மற்றும் கிரிமியாவின் பல பகுதிகளில் உக்ரைன் தொடர் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது.

அந்த வகையில் இருநாடுகளுக்கு இடையிலான போர் தாக்குதல் தொடங்கியதில் இருந்து சுமார் 190 முறை ரஷ்யா மற்றும் கிரிமியாவில் உள்ள பல பகுதிகளில் உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலின் பெரும்பாலான பகுதியில் ரஷ்ய தலைநகரான மாஸ்கோ, மேற்கு ரஷ்ய எல்லை பகுதிகள் மற்றும் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா ஆகியவற்றில் நடத்தப்பட்டுள்ளது.

கிரிமியாவின் சில பகுதியில் கடல் வழி ட்ரோன் தாக்குதலையும் உக்ரைன் முன்னெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...