images
உலகம்செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைன் நடத்தியுள்ள மொத்த ட்ரோன் தாக்குதல் எண்ணிக்கை

Share

ரஷ்யா மீது உக்ரைன் நடத்தியுள்ள மொத்த ட்ரோன் தாக்குதல் எண்ணிக்கை

இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ரஷ்யா மற்றும் கிரிமியாவில் 190 முறை உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய நிலையில் கிட்டத்தட்ட 18 மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரஷ்யாவின் பெரும் ஆயுதப் பலத்திற்கு முன்னதாக உக்ரைன் உறுதியாக நிலைத்து நிற்க அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து பல்வேறு உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

இதுவரையிலான போரின் நடுப்பகுதி வரை தடுப்பு தாக்குதல் முறையை மட்டும் செயல்படுத்தி வந்த உக்ரைன், மேற்கத்திய நாடுகளிடம் இருந்து போதுமான ஆயுத உதவியை கையிருப்பு பெற்றவுடன் ரஷ்யாவுக்கு எதிரான எதிர்ப்பு தாக்குலை பலமாக முன்வைத்து வருகின்றனர்.

ரஷ்யா மீதான உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்
உக்ரைனின் எதிர்ப்பு தாக்குதல் தொடங்குவதாக உக்ரைன் அறிவித்ததில் இருந்து ரஷ்யா மற்றும் கிரிமியாவின் பல பகுதிகளில் உக்ரைன் தொடர் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது.

அந்த வகையில் இருநாடுகளுக்கு இடையிலான போர் தாக்குதல் தொடங்கியதில் இருந்து சுமார் 190 முறை ரஷ்யா மற்றும் கிரிமியாவில் உள்ள பல பகுதிகளில் உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலின் பெரும்பாலான பகுதியில் ரஷ்ய தலைநகரான மாஸ்கோ, மேற்கு ரஷ்ய எல்லை பகுதிகள் மற்றும் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா ஆகியவற்றில் நடத்தப்பட்டுள்ளது.

கிரிமியாவின் சில பகுதியில் கடல் வழி ட்ரோன் தாக்குதலையும் உக்ரைன் முன்னெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

Share
தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...