உலகம்செய்திகள்

மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்த 87 பேரின் உடல்கள் அடக்கம்

Share

மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்த 87 பேரின் உடல்கள் அடக்கம்

 

The bodies of 87 people who died in the Manipur riots were buried

மணிப்பூர் இனக்கலவரத்தில் கொல்லப்பட்ட குக்கி சமூகத்தை சேர்ந்த 87 பேரின் உடல்கள் மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டது.

இந்திய மாநிலமான மணிப்பூரில் கடந்த 7 மாதங்களாக நடந்த இனக்கலவரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு, மெய்தி சமூக மக்களுக்கும் பழங்குடி குக்கி சமூக மக்களுக்கும் இடையே நடந்த இனக்கலவரம் பலராலும் பேசப்பட்டு மோசமான நிகழ்வாக பார்க்கப்பட்டது.

இந்த கலவரத்தில் இதுவரை மொத்தம் 180 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பிற இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

மெய்தி சமூக மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரியதால் எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர். இதனால் வன்முறை உருவாகி இனக்கலவரமாக மாறியது.

தற்போது, மணிப்பூர் மாநிலத்தில் இயல்புநிலை திரும்பி விட்டதாக மாநில அரசு தெரிவித்தாலும், தினம்தோறும் வன்முறை நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில், நேற்று குக்கி சமூகத்தை சேர்ந்த உயிரிழந்த 87 பேரின் உடல்கள் சுராசந்த்பூர் மாவட்டத்தில் நேற்று மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டது. செக்கன் பகுதியில் குக்கி தியாகிகள் கல்லறை என பெயரிடப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

கல்லறையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். அடக்கம் செய்யப்படும் போது இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் விடுவது நெஞ்சை உலுக்கும் விதமாக இருந்தது. கிராம பாதுகாப்பு தன்னார்வலர்கள் இறந்தவர்களின் உடலுக்கு துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்தினர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...