tamilni 404 scaled
உலகம்செய்திகள்

கொலைக்களமான பல்கலைக்கழகம்… துப்பாக்கிதாரியின் பதறவைக்கும் பின்னணி

Share

கொலைக்களமான பல்கலைக்கழகம்… துப்பாக்கிதாரியின் பதறவைக்கும் பின்னணி

செக் குடியரின் ப்ராக் நகரில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் துப்பாக்கியால் 14 பேர்களை கொன்றதுடன், தாமும் தற்கொலை செய்துகொண்டுள்ள விவகாரத்தில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

குறித்த கோர சம்பவத்தில் 25 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்திய அந்த நபரே கடந்த வாரம் வனப்பகுதியில் ஒரு ஆண் மற்றும் குழந்தையின் மரணத்திற்கும் காரணம் என்று நம்பப்படுகிறது.

ப்ராக் நகரில் அமைந்துள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தின் தத்துவ பீடம் மீதே வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் அந்த தாக்குதல்தாரியும் தற்கொலை செய்துகொண்டதாக செக் குடியரசு உள்விவகார அமைச்சர் உறுதி செய்துள்ளார். மேலும், அந்த தாக்குதல்தாரி சார்லஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்று வந்த மாணவன் David Kozak என்றே அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் குடியிருப்பில் அவரது தந்தையின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து, அந்த மரணத்திற்கு காரணம் அவரா என்பது குறித்தும் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

மட்டுமின்றி, தமது டெலிகிராம் செயலியில், உலகத்தை தாம் வெறுப்பதாகவும் முடிந்த அளவுக்கு வலிகளை விட்டுச்செல்ல தாம் முடிவெடுத்துள்ளதாகவும் David Kozak பதிவு செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பல்கலைக்கழக தாக்குதல் சம்பவத்தில், தொடக்கத்தில் 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கையில், 14க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...