7 30 scaled
உலகம்

புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கைத் துணைகளுக்கு குடியுரிமை வழங்கும் திட்டத்தை தொடங்கிய அமெரிக்கா!

Share

புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கைத் துணைகளுக்கு குடியுரிமை வழங்கும் திட்டத்தை தொடங்கிய அமெரிக்கா!

அமெரிக்க குடியுரிமை பெற்ற புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு குடியுரிமை வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி ஜோ பைடன் தொடங்கியுள்ளார்.

சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு வந்து நீண்ட காலமாக குடியுரிமைக்காக காத்திருப்பவர்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நவம்பர் 5-ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக புதிய குடிவரவு சட்டத்தை அமல்படுத்துவது ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த திட்டம் சட்டவிரோதமானது என்று குடியரசு கட்சி கூறுகிறது.

இத்திட்டத்தால் பயனடையும் லட்சக்கணக்கானவர்களில், 39 வயதான Uber ஓட்டுநர் மிகுவல் அலேமானும் (Miguel Aleman) ஒருவர். இவர் நான்கு வயதில் மெக்சிகோவில் இருந்து அமெரிக்கா வந்தவர்.

மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசிக்கும் இருவருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும்.

மெக்சிகோ, எல் சால்வடார், பிலிப்பைன்ஸ் மற்றும் பிற நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த முதல் புலம்பெயர் மக்களில் அலேமானும் ஒருவர்.

ஜூன் மாதம் அமெரிக்க அரசாங்கம் நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, 500,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க குடிமக்களின் வாழ்க்கைத் துணைவர்கள் வெளிநாட்டு புலம்பெயர்ந்தோர் ஆவர்.

ஜூன் 17 நிலவரப்படி, அவர்கள் குறைந்தது 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

அமெரிக்க குடியுரிமை பெற்ற பெற்றோருடன் வசிக்கும் 50,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளும் இச்சட்டத்தின் கீழ் அமெரிக்க குடியுரிமையைப் பெறுவார்கள்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

13 6
உலகம்செய்திகள்

வடக்கு மாகாண ஆளுநர் – மனித உரிமைகள் ஆணையாளருக்கு இடையே விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினருக்கும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்...

19 3
உலகம்செய்திகள்

உக்ரைனில் கோர தாக்குதல்..! பலர் பலி

தென்கிழக்கு உக்ரைனில் ரஷ்ய விமானப் படை நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில்...

Untitled 1 Recovered Recovered 6
உலகம்செய்திகள்

பேச்சுவார்த்தைக்கு தயாரான ஈரான்! பெசேஷ்கியான் விடுத்துள்ள எச்சரிக்கை

இஸ்ரேல் தம்மீது முதலில் தாக்குதல் நடத்தாவிட்டால் ஈரான் பதிலடி தாக்குதலை ஒருபோதும் நடத்தியிருக்காது என ஈரான்...