8 28 scaled
உலகம்

2025ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? பாபா வங்காவின் கணிப்புகள்: முரண்பட்ட கருத்துக்களைக் கூறும் மக்கள்

Share

2025ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? பாபா வங்காவின் கணிப்புகள்: முரண்பட்ட கருத்துக்களைக் கூறும் மக்கள்

பல்கேரியாவில் பிறந்தவரான பாபா வங்கா, எதிர்காலம் குறித்த பல விடயங்களை கணித்துள்ளார். அவற்றில் பிரெக்சிட், இளவரசி டயானாவி ன் மரணம், சோவியத் யூனியனின் சிதைவு மற்றும் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் என 85 சதவிகித கணிப்புகள் சரியாக நிறைவேறின.

ஆனால், அவரது கணிப்புகளில் சில தவறாயும் போயுள்ளன. 2016ஆம் ஆண்டில், ஒபாமாதான் அமெரிக்காவின் கடைசி ஜனாதிபதியாக இருப்பார் என்றும், 2010இல் மூன்றாம் உலகப்போர் துவங்கும் என்றும் கணித்திருந்தார் அவர். ஆனால், அவை பலிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில், 2025ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என பாபா கணித்த விடயங்கள் குறித்த செய்திகள் இப்போதே வெளியாகிவருகின்றன.

5079ஆம் ஆண்டு வரை உலகம் அழியாது என்று கூறியுள்ள பாபா, ஆனால், 2025ஆம் ஆண்டு, பூமியின் அழிவு துவங்குவதில் முக்கிய பங்காற்றும் என்று கூறியுள்ளார்.

ஆண்டின் இறுதிவாக்கில் மிகப்பெரிய அளவிலான வானியல் நிகழ்வு ஒன்று நிகழ இருப்பதாகவும், 2025இல் ஐரோப்பாவில் ஒரு பெரும் மோதல் வெடிக்கும் என்றும், அதனால் மக்கள்தொகை பெருமளவில் குறைந்துவிடும் என்றும் பாபா கணித்துள்ளார்.

பாபாவின் கணிப்புகளை நம்புவர்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதே நேரத்தில், அவரை விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள்.

இவர் ஆண்டுதோறும் இப்படித்தான் சொல்கிறார். ஒருவேளை, அவர் மக்கள் கவனம் ஈர்ப்பதற்காக அப்படி செய்யக்கூடும் என்னும் ரீதியிலும் சமூக ஊடகங்களில் சிலர் பாபாவைக் குறித்து விமர்சித்துவருகிறார்கள்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 47
செய்திகள்உலகம்

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவுக்கு விஜயம்: உறவுகளை வலுப்படுத்த புதிய முயற்சி

பிரித்தானிய நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர் கட்சி (Labour) மற்றும் கன்சர்வேடிவ் கட்சி (Conservative) ஆகிய இரு...

world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...