235637092 10227463296751273 6696546886395618388 n
உலகம்செய்திகள்

கொல்களத்திலிருந்து தப்பியோடிய காளைக் கன்றுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Share

கொல்களத்திலிருந்து தப்பியோடிய காளைக் கன்றுக்கு அடித்த அதிர்ஷ்டம்

இறைச்சிக்கு வெட்டுவதற்காக கொல்களம் ஒன்றுக்குக் கொண்டுவரப்பட்ட காளை மாட்டுக் கன்று உரிமையாளரின் பிடியில் இருந்து துணிகரமாகத் தப்பியது.

பிரான்ஸின் மத்திய பிராந்தியமாகிய Auvergne-Rhône-Alpes இல் உள்ள Feurs (Loire) என்ற இடத்தில் கடந்தவாரம் இந்தச் சம்பவம் நடைபெற்றது.

உயிரைக் காப்பதற்காக நீண்ட தூரம் ஓடி நகர மத்தியில் ஒளிந்துகொண்ட அந்தக் கன்றை தீயணைப்புப் பிரிவினர் மயக்க மருந்துடன் கூடிய ஊசி அம்பு(hypodermic arrow) எய்து பிடித்தனர். கால்நடை மருத்துவர் ஒருவரது கண்காணிப்புடன் அது ஆழ்ந்த உறக்கத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டது.

மாட்டுக்கு உரிமை கோரி அதனை மீளப்பெற்று கொல்களத்துக்குக் கொண்டுசெல்ல அதன் உரிமையாளர் முயன்றார். ஆனால் மயக்க மருந்து செலுத்தப்பட்ட மிருகங்களை 35 தினங்களுக்குப் பின்னரே இறைச்சிக்காகக் கொல்ல முடியும் என்பது சுகாதார விதி. அந்த விதி கன்றின் தலைவிதியை மாற்றியது.

காளைக் கன்று தப்பித்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. அதனைக் காப்பாற்றுவதற்கான கோரிக்கை அடங்கிய இணைய மகஜர் ஒன்று திறக்கப்பட்டது. சிறிது நேர இடைவெளிக்குள் காளைக் கன்றுக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் சேர்ந்தன. கன்றுக்கான கட்டணத்தை உரிமையாளருக்கு வழங்கி அதனைப் பாதுகாப்பதற்கு ஆதரவாக நிதி குவிந்தது.

“கன்று தனது உயிரைக் காத்துக்கொள்ளும் உரிமைக்காகக் காட்டிய உறுதியையும் துணிச்சலையும் கருத்தில் கொண்டு ஒர் குறியீட்டு அடையாளமாகவேனும் அதனைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது” – என்று விலங்குரிமை பேணுவோர் இணையத்தில் தமது ஆதரவைத் தெரிவித்தனர். கன்றை மீண்டும் கொல்களத்துக்கு அனுப்பவேண்டாம் என்று குரல்கள் எழுந்தன.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் நொடிக்குள் கவனத்தை ஈர்த்துவிடுகின்றன. மாட்டுக் கன்றின் செய்தியும் அவ்வாறே வைரலாகப் பரவி அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவியிருக்கிறது.

Brigitte Bardot Foundation என்ற நிறுவகம் இது போன்று கொல்களங்களில் இருந்து மீட்கப்படுகின்ற ஆயிரக்கணக்கான விலங்குகளைப் பேணிப் பராமரித்து வருகிறது. தப்பியோடிய காளைக் கன்றைப் பராமரிக்கும் பொறுப்பையும் அது ஏற்றுக்கொண்டது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...