உலகம்செய்திகள்

உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி தாக்குதல்: 158 ஏவுகணைகள் வீச்சு

Share

ரஷ்யா, இதுவரை இல்லாத அளவில், உக்ரைன் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.

வீடுகள், மருத்துவமனை, ஷாப்பிjங் காம்ப்ளக்ஸ் என ஒரு இடம் விடாமல் சரமாரியாக உக்ரைன் மீது ரஷ்யா வான்வெளித்தாக்குதல் நிகழ்த்தியுள்ளது.

ரஷ்யா இதுவரை இல்லாத அளவில், 158 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாள், உக்ரைன் கிரிமியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. உக்ரைன் தாக்குதலில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.

Feodosia துறைமுகத்தில் ரஷ்யாவுக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்றின்மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த ரஷ்ய ஜனாதிபதி புடின், பழிக்குப்பழி வாங்கப்போவதாக சூளுரைத்திருந்தார்.

ரஷ்யா, 122 ஏவுகணைகளையும், 36 ட்ரோன்களையும் கொண்டு தாக்கியதாகவும், உக்ரைன் விமானப்படை 87 ஏவுகணைகளையும், 27 ட்ரோன்களையும் வழிமறித்துத் தாக்கி அழித்ததாகவும் உக்ரைன் ராணுவ தளபதியான Valerii Zaluzhnyi தெரிவித்துள்ளார்.

இந்த ஏவுகணைத் தாக்குதல், இன்று அதிகாலை 5.00 மணிக்கு நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் மகப்பேறு மருத்துவமனை ஒன்றும், ஷாப்பின் மால் ஒன்றும், குடியிருப்புகளும் சேதமடைந்துள்ளன. பொதுமக்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளார்கள், இரண்டு குழந்தைகள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளார்கள்.

ரஷ்யத் தாக்குதலில் கட்டிடங்கள் தீப்பிளம்பாக பற்றியெரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...