76029f91 439d3e2f f1636930 basil
செய்திகள்அரசியல்இலங்கை

ஆயுதக் கொள்வனவுக்கு எதற்காக வடகொரியா தேர்வு செய்யப்பட்டது? – பஸிலை நோக்கி பாயும் கேள்விக்கணைகள்!

Share

” போர்காலத்தில் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதற்கு சீனா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் முன்வந்திருந்த நிலையில், எதற்காக வடகொரியா தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்தும், ஆயுதக் கொள்வனவுக்காக ஏன் கறுப்பு பணம் பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பிலும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச நாடாளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜீர அபேவர்தன வலியுறுத்தினார்.

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” போர் காலத்தில் ஆயுதம் கொள்வனவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பானது தேசிய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச தளத்திலும் தாக்கத்தை செலுத்தக்கூடிய விடயமாக அமைந்துள்ளது.

போரின்போது கறுப்பு பணத்தை பயன்படுத்தி வடகொரியாவில் இருந்து ஆயுதம் கொள்வனவு செய்யப்பட்டது என நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய நிதி நிலைமை குறித்து சர்வதேசத்துக்கு நம்பிக்கை இல்லாத நிலையில், நிதி அமைச்சரின் இந்த அறிவிப்பானது, சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, எம்மால் எழுப்படும் 4 கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் அவர் உரிய விளக்கத்தை விரைவில் வழங்க வேண்டும்.

1. ஆயுதக் கொள்வனவுக்கு எதற்காக கறுப்புப் பணம் பயன்படுத்தப்பட்டது?

2. போர் நடவடிக்கைக்கு நிதி தேவையெனில் நாடாளுமன்றம் ஊடாக பெற்றிருக்கலாம். எனவே, நிதி பெறப்பட்ட வழிமுறைகள் மற்றும் இடங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தல் அவசியம்.

3. சீனா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஆயுதம் வழங்குவதற்கான ஒத்துழைப்பை வழங்கிவந்த நிலையில், எதற்காக வடகொரியா தேர்வு செய்யப்பட்டது?

4. வடகொரியாவில் இருந்து வாங்கப்பட்ட ஆயுதங்கள் எவை? அவை உரியவகையில் தரவுக் கட்டமைப்பில் பதிவுசெய்யப்பட்டனவா?

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...