ranjith
செய்திகள்அரசியல்இலங்கை

மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசு ஏன் அஞ்சுகின்றது?

Share

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு ஏன் அஞ்சுகின்றது, தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயார். தோல்வி பயத்தால்தான் தேர்தலை அரசு இழுத்தடிக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

” மாகாணசபைத் தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கு நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம். எமது பக்கத்தில் தவறு இடம்பெற்றதுதான். அது சரிசெய்யப்பட வேண்டும்.

அதற்கான ஆதரவை நாம் வழங்குவோம். எனவே, எமது தவறை மட்டும் சுட்டிக்காட்டிக்கொண்டு தேர்தலை இழுத்தடிக்க வேண்டாம். இரு வருடங்கள் தவறை மட்டும்தான் கூறிக்கொண்டிருக்கின்றீர்கள்.

அதேபோல உள்ளாட்சிமன்றத் தேர்தலையும் இரு வருடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது.”- என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...