Pakistan vs West Indies
செய்திகள்விளையாட்டு

பலத்த பாதுகாப்புடன் பாகிஸ்தானுக்குள் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி!

Share

பாகிஸ்தான் பலத்த பாதுகாப்புடன் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியை வரவேற்றுள்ளது.

மூன்று இருபதுக்கு 20 மற்றும் 3 ஒருநாள் துடுப்பட்ட தொடர்களில் பங்கேற்பதற்காக 26 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தான் செல்வது இதுவே முதல் தடவையாகும்.

நியூசிலாந்து அணி மூன்று மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி தனது பாகிஸ்தான் கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை இறுதி நேரத்தில் இரத்துச் செய்து போட்டியில் பங்கேற்காமல் நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாகிஸ்தான் சென்றடைந்த மேற்கிந்திய தீவுகள் அணியினர், கராச்சி விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் விடுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கராச்சியில் ஆரம்பமாகவுள்ளது.

இதில் எதிர்வரும் 13, 14, 16 ஆம் திகதிகளில் இருபதுக்கு 20 போட்டிகளும் 18, 20, 22 ஆகிய திகதிகளிலும் ஒருநாள் சர்வதேச போட்டிகள் இடம்பெறவுள்ளன.

மேற்கிந்திய தீவின் அணித்தலைவர் கைரன் பொல்லார்ட், பொபியன் அலென், ஒபெட் மெக்காய் ஆகியோர் காயம் காரணமாகவும், இவின் லீவிஸ், ஹெட்மயர், அண்ட்ரே ரஸல், சிமோன்ஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணத்தினாலும் இந்த போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் தலைவர் ஜேசன் ஹோல்டருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய சிரேஷ்ட வீரர்கள் இல்லாமல் இந்த தொடரில் பங்குபெறுவதாக மேற்கிந்திய தீவுகள் அணி அறிவித்துள்ளது.

இருபதுக்கு 20 அணியின் தலைவராக நிகோலஸ் பூரனும், ஒருநாள் சர்வதேச அணியின் தலைவராக ஷாய் ஹோப்பும் அணியை வழி நடத்துவார்களென மேற்கிந்திய தீவின் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு கிரிக்கட் போட்டிகளில் எப்பிரச்சனைகளும் வாராது என பாகிஸ்தானின் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

#sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...