Pakistan vs West Indies
செய்திகள்விளையாட்டு

பலத்த பாதுகாப்புடன் பாகிஸ்தானுக்குள் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி!

Share

பாகிஸ்தான் பலத்த பாதுகாப்புடன் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியை வரவேற்றுள்ளது.

மூன்று இருபதுக்கு 20 மற்றும் 3 ஒருநாள் துடுப்பட்ட தொடர்களில் பங்கேற்பதற்காக 26 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தான் செல்வது இதுவே முதல் தடவையாகும்.

நியூசிலாந்து அணி மூன்று மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி தனது பாகிஸ்தான் கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை இறுதி நேரத்தில் இரத்துச் செய்து போட்டியில் பங்கேற்காமல் நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாகிஸ்தான் சென்றடைந்த மேற்கிந்திய தீவுகள் அணியினர், கராச்சி விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் விடுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கராச்சியில் ஆரம்பமாகவுள்ளது.

இதில் எதிர்வரும் 13, 14, 16 ஆம் திகதிகளில் இருபதுக்கு 20 போட்டிகளும் 18, 20, 22 ஆகிய திகதிகளிலும் ஒருநாள் சர்வதேச போட்டிகள் இடம்பெறவுள்ளன.

மேற்கிந்திய தீவின் அணித்தலைவர் கைரன் பொல்லார்ட், பொபியன் அலென், ஒபெட் மெக்காய் ஆகியோர் காயம் காரணமாகவும், இவின் லீவிஸ், ஹெட்மயர், அண்ட்ரே ரஸல், சிமோன்ஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணத்தினாலும் இந்த போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் தலைவர் ஜேசன் ஹோல்டருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய சிரேஷ்ட வீரர்கள் இல்லாமல் இந்த தொடரில் பங்குபெறுவதாக மேற்கிந்திய தீவுகள் அணி அறிவித்துள்ளது.

இருபதுக்கு 20 அணியின் தலைவராக நிகோலஸ் பூரனும், ஒருநாள் சர்வதேச அணியின் தலைவராக ஷாய் ஹோப்பும் அணியை வழி நடத்துவார்களென மேற்கிந்திய தீவின் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு கிரிக்கட் போட்டிகளில் எப்பிரச்சனைகளும் வாராது என பாகிஸ்தானின் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

#sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world
செய்திகள்இந்தியா

சீமான் பின்னடைவு: தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பிரபு முன்னிலை!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி...

Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...