66666 scaled
செய்திகள்இலங்கை

திருமண வைபவங்கள் கட்டுப்பாடுகளுடன்!

Share

திருமண வைபவங்களை தற்போதைய சட்ட கட்டுப்பாடுகளின் கீழ் மீண்டும் நடத்துவது குறித்து கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர அளவு திருமண சேவை வழங்குநர் சங்கம் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆகியவற்றுக்கு இடையே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்க தலைமை காரியலயத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

தற்போதைய கொரோனாத் தொற்று பரவல் காரணமாக திருமண வைபவங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் மீண்டும் திருமண நிகழ்வுகளை நடத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டலின் கீழ் குறைந்த பட்ச எண்ணிக்கையான விருந்தினர்களைக் கொண்டு திருமண நிகழ்வுகளை நடத்த இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதில் மதுபான விருந்தின்றி முழுமையான தடுப்பூசிகளை பெற்றவர்கள் மாத்திரம் கலந்துகொள்ள அனுமதியளிக்கும் வகையில் சுகாதார வழிகாட்டல் ஒன்றை தயாரிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை கொவிட் – 19 கட்டுப்பாட்டு தேசிய செயலணியிடம் முன்வைக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6831acc21dbb6
இலங்கைசெய்திகள்

விசேட சுற்றிவளைப்பு: வசமாக சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்டோர்

நாடளாவிய ரீதியில் நேற்று (23) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 475...

18 22
இலங்கைசெய்திகள்

கட்சியின் தீர்மானங்கள் குறித்து திருப்தியில்லை – ரோஹினி

ஐக்கிய மக்கள் சக்தியின் சில தீர்மானங்கள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரட்ன...

14 27
இலங்கைசெய்திகள்

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம்

மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனால் நாடாளுமன்றில்...

16 24
இலங்கைசெய்திகள்

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தாதியர்கள் அரச சேவையில் இணைப்பு

3,147 தாதியர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இதற்கான...