pcr
செய்திகள்இலங்கை

காரைநகரில் திருமண கொண்டாட்டம் – ‘PHI’ மீது தாக்குதல்

Share

காரைநகரில் திருமண கொண்டாட்டம் – ‘PHI’ மீது தாக்குதல்

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது அதிகளவானோருடன் நடைபெற்ற திருமண நிகழ்வு தொடர்பில் நடவடிக்கை எடுக்கச் சென்றபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் காரைநகரில் நூற்றுக்கும் மேற்மேற்பட்டவர்களுடன் நடைபெற்ற திருமண நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்களை சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தியதோடு அவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ள சென்ற சிலர், பி,சி.ஆர். உபகரணங்களை வீசி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டமையை தொடர்ந்து பொலிஸார் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மூவரை கைதுசெய்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...