ranjith
செய்திகள்அரசியல்இலங்கை

தடைகளை கண்டு நாம் பின்வாங்க மாட்டோம்! – ரஞ்சித் மத்தும பண்டார

Share

” ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்படவுள்ள அரச எதிர்ப்பு போராட்டத்துக்கு அரசு அஞ்சிவிட்டது. அதனால்தான் போராட்டத்தை ஒடுக்குவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. நாம் பின்வாங்க மாட்டோம். திட்டமிட்ட அடிப்படையில் எமது போராட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” கொரோனாவால் நாட்டில் நாளாந்தம் 200 பேர் பலியானபோதுகூட கடும் கட்டுப்பாடுகளை அரசு உடன் விதிக்கவில்லை. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தை தடுப்பதற்காக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர்தான் அரசிடம் கோரிக்கை விடுக்க வேண்டும். ஆனால் இந்த அரசு சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்துக்கு அஞ்சியே அரசு இப்படி செயற்படுகின்றது. எது எப்படி இருந்தாலும் திட்டமிட்ட அடிப்படையில் எமது போராட்டம் நடைபெறும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....