Gamini
செய்திகள்இலங்கை

எம்மிடம் பொருளாதார பலம் இல்லை! – நியாயப்படுத்திய அமைச்சர்

Share

“விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான ‘பொருளாதார பலம்’ தற்போது அரசாங்கத்திடம் இல்லை.” என அறிவித்து, தொடர் விலையேற்றத்தை நியாயப்படுத்தியுள்ளார் அமைச்சர் காமினி லொக்குகே.

மொட்டுக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது, இதன்போது விலை உயர்வு சம்பந்தமாக அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்.

“பால்மா, சமையல் எரிவாயு உட்பட பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விலை உயர்வுக்கு அரசாங்கத்தின் தவறு காரணம் அல்ல. உலக சந்தையில் பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. அதுவே காரணம்.

உலக சந்தையில் விலை அதிகரித்தாலும், எரிபொருள் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயு ஆகியவை அதே விலைக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்டன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

கொரோனா நிலைமையில் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான பொருளாதார சக்தி அரசாங்கத்திடம் இல்லை. அதிக விலைக்கு வாங்கி, குறைந்த விலையில் வழங்கினால் அது பெரும் தாக்கமாக அமையும்.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...