20211214 141742 scaled
செய்திகள்அரசியல்இலங்கை

வாழும் சாட்சிகள் நாமே – உறவுகள் ஆதங்கம்!!!

Share

வாழும் சாட்சியங்களாகிய நாம் உயிருடன் இருக்கும்போதே எமது சாட்சிகள் உதாசீனப்படுத்தப்பட்டு வருகின்றன என வடகிழக்கைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இதனை தெரிவித்தனர்

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

இன்று 1754 நாளாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் எம்முடன் இணைந்து போராடிய 108 உறவுகளை இழந்துவிட்டோம். இந்த 108 பேரும் தமது உறவுகளின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சாட்சிகளாகும்.

நாம் கூட நோய்வாய்ப்பட்டு தமது வாழ் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம். வாழும் சாட்சியங்களாகிய நாம் உயிருடன் இருக்கும்போதே எமது சாட்சிகள் உதாசீனப்படுத்தப்பட்டு வருகின்றன.

எத்தனையோ ஆணைக்குழுக்களிடம் எமது சாட்சிகளை அக்கறையுடன் பதிவு செய்யச் சென்றோம்.

அங்கு நாம் கண்டது அவர்கள் நாம் கூறியவற்றை பதிவு செய்யாது ஆடு வேண்டுமா கோழி வேண்டுமா? என்ற கேள்விகளைக் கேட்டு எம் தேடல்களையும் எம் உறவுகள் மீது நாம் கொண்டுள்ள அன்பையும் கொச்சைப்படுத்தினர்.

இதை விட நாம் எமது கண்ணீர்க் கதைகளை நெஞ்சடைக்க கூறியவற்றை தாலாட்டாக எடுத்து அவர்கள் நித்திரை கொண்டது கூட ஊடகங்களில் வெளிவந்தது.

இப்படியான கசப்பான அனுபவங்களாலும் இலங்கை அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் எமக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதியா என வெளிப்படையாகவே செயல்பட்டதாலும் சர்வதேசத்திடம் நீதி கேட்டு போராடி வருகின்றோம்.

கைக்குழந்தைகளுடனும் சிறார்களுடனும் குடும்பமாக சரணடைந்தவர்களில் 20 க்கும் மேற்பட்ட சிறார்களின் நிலையை அறிய ஆணைக்குழுக்களுக்கு சென்று சாட்சியங்கள் பதிவு செய்தும் பதில் ஏதுமில்லை.

ஐநாவின் 30இன் கீழ்1 தீர்மானத்திற்கமைய உருவாக்கப்பட்டதாக கூறப்படும் “காணாமல் போனோர் அலுவலகம்” கூட எமது நோக்கத்தை நிறைவேற்றவில்லை.

அதன் இயலாமையை ஆரம்பத்திலிருந்து கூறி அதை நிராகரித்த போதும் ஏற்றுக்கொள்ளாத சர்வதேசம் தற்போது உண்மையை விளங்கிக் கொண்டிருக்கும்.

எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை சர்வதேசம் புரிய தொடங்கியிருக்கும் இந்நிலையில் அரசாங்கம் ஜெனிவாவுக்கு அனுப்புவதற்கு சாட்சியங்களைத் திரட்டும் சாக்கில் சோடிக்கப்பட்ட தகவல்களை அனுப்புவதற்காய் ஒரு நாடு ஒரு சட்டம் எனும் பெயரில்  ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

எமது பிரதேசத்தில் உள்ள பாதிக்கப்படாதவர்களாக கூட்டி வந்தால் நாம் கண்டுபிடித்து விடுவோம் என்பதற்காக இந்த ஏற்பாடு, எமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வேலைக்கு ஆட்களை திரட்டிக் கொடுத்தது மன்னாரிலுள்ள ஒரு நிறுவனம்.

தமிழர் பாதிக்கப்பட்டவர்களுக்கென வெளிநாடுகளில் பணம் பெற்று ஏப்பமிடும் நிறுவனங்கள் அரசுக்கு துணை போய் மேலும் மேலும் தமது சட்டைப் பைகளை நிரப்புவதில் குறியாகவுள்ளார்கள்.

இதை மக்களாகிய நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பச்சைத் துரோகச் செயலுக்கு உடந்தையாக இருப்பவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்து நம் சமூகத்தை துப்பரவு செய்யுங்கள்.மேலும் சர்வதேச நாடுகளுக்கும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை அதன் தாக்கத்தை மறைப்பதற்கும் குறைப்பதற்குமான முயற்சியே இது என்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...