bo
செய்திகள்இலங்கை

அத்துமீறும் இந்திய படகுகள் – யாழ். மீனவர்கள் இருவர் மாயம்!!

Share

அத்துமீறும் இந்திய படகுகள் – யாழ். மீனவர்கள் இருவர் மாயம்!!

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர். இந்திய மீனவர்களின் இழுவைப் படகு மோதியதிலேயே இவர்கள் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கடற்பரப்பில் அண்மைய நாள்களாக இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்த நிலையில், நேற்று காலையிலும் இந்திய படகுகள் வடக்கு கடல் பகுதியில் நடமாடியுள்ளன.

நேற்று காலை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வல்வெட்டித்துறை மீனவர்களின் இரண்டு படகுகள் மீது, அங்கு வந்த இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் மோதியுள்ளன.

இந்த சம்பவத்தில் ஒரு படகு கடும் சேதமடைந்த நிலையில், அதில் பயணித்த இருவருடன் கரை திரும்பியுள்ளது. இதேவேளை, மற்றைய படகில் பயணித்த வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த இராகவன், வளவன் ஆகிய மீனவர்கள் இருவரும் கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் இருவரையும் தேடி ஏனைய மீனவர்கள் கடலுக்குச் சென்று தேடுதல் நடத்தியபோதிலும் நேற்று இரவு வரை அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...