தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் வலி தெற்கு பிரதேச சபை முதலிடம்

WhatsApp Image 2021 12 30 at 8.47.40 PM

2020 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத செயற்திட்டங்களில் வலி தெற்கு பிரதேச சபையின் சுன்னாகம் பொது நூலகம் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்றுக்கொண்டது.

2020 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத விருது வழங்கல் நிகழ்வு புதன்கிழமை கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் தலைவர் சோனால குணவர்த்தன தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வைத்து வலி தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் க.தர்சன், சுன்னாகம் பொது நூலகத்தின் பிரதம நூலகர் சு.ஜெயலட்சுமி ஆகியோர் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றமைக்கான விருதினையும் சான்றிதழையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை இரண்டாம் இடத்தினை வத்தளை பிரதேச சபையின் ஹந்தளை பொது நூலகம் பெற்றுக்கொண்டது.

#SriLankaNews

Exit mobile version