vav
செய்திகள்இலங்கை

தடுப்பூசி அட்டை கட்டாயம்! – வவுனியா பிரதேச சபை அதிரடி

Share

வவுனியா பிரதேச செயலகத்துக்குள் கொரோனாத் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மாத்திரமே நுழைய முடியும் என வவுனியா பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

இந்த நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வவுனியா பிரதேச செயலகத்துக்குள் சேவைகளைப் பெற வருகை தருவோர் தடுப்பூசி அட்டை, தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை தம்வசம் வைத்திருப்பதுடன் குறைந்தது ஒரு தடுப்பூசியையாவது பெற்றிருத்தல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு தடுப்பூசிகளை பெறாது அட்டை இன்றி வருகை தருவோருக்கு நுழைவாயிலில் வைத்தே சேவை வழங்கப்படும் என வவுனியா பிரதேச செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் தடுப்பூசி அட்டை பரிசோதனை முறை அமுல்படுத்தப்படாத நிலையில் சுகாதார அமைச்சு இந்த செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த இதுவரை தீர்மானிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...