cropped 71 696x393 1rr scaled
செய்திகள்இலங்கை

உயிர்த்த ஞாயிறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு முன்னிலையில் இந்த வழக்கு இன்று 04 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்று 24 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதுடன் ஒருவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ள காரணத்தால் அவர் நீதிமன்றுக்கு சமூகமளிக்கவில்லை.

கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு திட்டமிடல், உதவி வழங்கல் மற்றும் பலத்த காயங்களுக்கு உட்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரதிவாதிகள் 25 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...