digital iddddd
செய்திகள்இலங்கை

டிஜிட்டல் முறையில் தடுப்பூசி அட்டை

Share

முழுமையான இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்டவர்களுக்கான முன்மொழியப்பட்ட டிஜிட்டல் அட்டை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இந்த அட்டைகளை விநியோகித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்ட வெளிநாடு செல்லவுள்ளோருக்கு குறித்த டிஜிட்டல் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் குறியீட்டில் அடிப்படையில் டிஜிட்டல் அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது .

இதன் மூலம் எந்தவொரு நபரும் போலி அட்டை தயாரிப்பதற்கான சந்தர்ப்பம் தடுக்கப்படும் வகையில் முழுமையான பாதகாப்புடன் குறித்த அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் QR குறியீடு ஊடாக தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது எனவும் துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 28
உலகம்செய்திகள்

ஒரு இரவில் 37,000 குடியுரிமை பறிப்பு – வளைகுடா நாடொன்றின் அதிர்ச்சி

குவைத்தில் ஒரு இரவில் 37,000 பேர் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். குவைத் அரசு 37,000-க்கும் மேற்பட்ட...

14 30
உலகம்செய்திகள்

கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம் – டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய முன்னெடுப்பு

கனடாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சராக எவன் சாலமன் (Evan Solomon) நியமிக்கப்பட்டுள்ளார். 2025 மே...

13 28
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இந்திய வம்சாவளி பில்லியனர்

பிரித்தானியாவில் வரிவிதிப்புகள் கடுமையானதால், தொழிலதிபர் ஷ்ரவின் மிட்டல் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார். பிரித்தானிய அரசின்...

12 28
உலகம்செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தல் அறிக்கை… பாகிஸ்தானில் பயங்கர ஆயுதங்கள்: சீனாவிற்கு தொடர்பு

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் பாகிஸ்தான்...