TALIBAN 1
செய்திகள்உலகம்

ஆப்கானிஸ்தான் குறித்து அமெரிக்கா வெளியிட்ட பரபரப்புத் தகவல்!!

Share

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கக்கூடாது என, அமெரிக்காவும், இந்தியாவும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படையினர் அங்கிருந்து வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானின் அரச படையினருடன் போரிட்ட தலிபான்கள் அந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் அங்கிருந்து தலிபான் எதிர்ப்பாளர்கள் அனைவரும் வெளியேறும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தொடர்ந்து ஆட்சியமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து, தலிபான்களுக்கு உலக நாடுகள் ஆதரவளிக்க வேண்டுமென, சீனாவும், பாகிஸ்தானும் நேற்று முன்தினம் கூட்டாக அழைப்பு விடுத்திருந்தன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக எப்போதும் இருக்காது என, தலிபான்கள் உறுதியளிக்க வேண்டுமென கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

அமெரிக்க – இந்தியா நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளின் பங்கேற்பில் விசேட கூட்டம் அமெரிக்கா வாசிங்டனில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், குறித்த கூட்டத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்துள்ள தலிபான்களின் ஆட்சியை, அமெரிக்கா போன்ற நாடுகள் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...