நிரூபமா ராஜபக்ஷவின் கணவரும் பிரபல தொழிலதிபருமான திருக்குமார் நடேசன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பெண்டோரா ஆவண விவகாரம் தொடர்பில் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
தனக்கும், தனது மனைவிக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீன விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு திருக்குமார் நடேசன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.
தனக்கும், தனது மனைவியான முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவுக்கும் சொந்தமான மறைமுக வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் வெளிநாடுகளில் உள்ளதாகக் குறித்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தம்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், தாம் எந்தவொரு குற்றச் செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை எனவும், திருக்குமார் நடேசன் தனது கடிதத்தினூடாக ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a comment