ஆப்கானிஸ்தானில் தாலீபான்கள் 13 பேரை சுட்டு கொலை செய்துள்ளார்கள்.
அங்கு தங்களுக்கு எதிராக ஆயுதமேந்தி வரும் குழுக்களை கொலைசெய்தும் வருகிறாரார்கள்.அதனால் அங்கு பதற்ற நிலை காணப்படுகிறது.
ஹைதர் மாவட்டத்தில் தமக்கு எதிராக உருவாகியுள்ள குழுக்கள் மீது நடாத்திய தாக்குதலிலேயே, முன்னர் ஆப்கான் அரச படைகளில் பணிபுரிந்த 11 பேர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் 17 வயதுடைய சிறுமியும் உள்ளடங்குவதாக அந் நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் அங்குள்ள மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. தாலீபான்களின் இத் தாக்குதலை சர்வதேச நாடுகள் பல கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment